Wednesday 24 June 2015

எதற்கு இந்த மானியம்..?

டெல்லி பாராளுமன்றத்தின் எம்.பி.க்களுடைய உணவகத்தில் அனைத்து உணவுகளும் மிகக் குறைவான விலையில் வழங்கப்படுகின்றன. இங்கே ஆட்டுக்கறி வறுவல் - ரூ.20, கோழிக்கறி வறுவல்-ரூ.29, அவிச்ச முட்டை, மசாலா தோசை - ரூ.6. இப்படி பல உணவுப் பொருட்களும் 
மிகவும் மலிவாக நமது எம்.பி.க்களுக்கு வழங்கப்படுகின்றன


அரசு மானியம் வழங்குவதால் இது சாத்தியமாகிறது. இப்படி மலிவான விலையில் நமது எம்.பி.க்களுக்கு உணவு வழங்குவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ 60 கோடிக்கும் மேல் அரசு மானியம் வழங்கியிருக்கிறது.

இந்தியாவில் வி..பி. க்கள் எனப்படுகிற 
எம்.எல்..க்கள், எம்.பி.க்கள்,அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் பிரபலங்கள் அனைவருமே
சாதாரண மக்களுக்கு இல்லாத பல விஷேச சலுகைகளைப் பெற்றவர்களாயிருக்கின்றனர். அதிலும் சாதாரண மக்களின் வரிப்பணத்திலேயே அவர்கள் 
இந்தச் சலுகைகளை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் உண்ணும் உணவுகளுக்குக் கூட மக்களின் பணத்தில் இத்தகைய சலுகை வழங்கப்பட வேண்டுமா..?
எதற்காக இவ்வளவு குறைந்த விலையில் அவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன..?நமது மக்களின் பிரதிநிதிகள் என்ன ஏழைகளா..? அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா..?

நமது எம்.பி.க்களில் பெரும்பாலோனோர் கோடிஸ்வரர்கள். ஒரு சிலர் வேண்டுமானால் இலட்சாதிபதிகளாக இருக்கலாம். இவர்கள் அலவன்ஸ்கள் உட்பட மாத சம்பளமாக சுமார் ரூ 1,50,000 பெறுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் உணவை சாதாரண மக்கள் வாங்கிச் 
சாப்பிடுகிற அதே விலையில் வாங்கிச் சாப்பிட முடியாதா..? அல்லது அப்படிச் செய்தால் 
அவர்களது கௌரவம் குறைந்து விடுகிறதா..?

நமது மக்கள் பிரதிநிதிகள் சாப்பிடுகிற சாப்பாட்டிற்கு கூட அவர்களுக்கு வாக்களித்த மக்கள்தான் பணம் தர வேண்டுமா..?

இது எந்த வகையிலான வி..பி. கலாச்சாரம்..?


இந்நிலை நீடிக்கக் கூடாது.எம்.பி.க்களுக்கு அளிக்கப்படுகிற இத்தகைய உணவு மானியத்தை மத்திய அரசு உடனடியாக இரத்து செய்ய வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து இந்த மானியத்தை இரத்து செய்ய அரசை வலியுறுத்த வேண்டும்.

எம்.பி.க்களும் எம்.எல்..க்களும் மக்களின் பிரதிநிதிகள்தான்; எஜமானர்கள் அல்லர்.

Thursday 11 June 2015

வை.கோ.விற்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய மறுமலர்ச்சி தி.மு.. தலைவர் வை.கோ. அவர்களுக்கு
வணக்கம்.

இப்போது தாங்கள் தி.மு..வுடன் நெருங்கிய உறவு கொள்ள ( தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடிய அளவில் ) தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை தங்களின் சமீப காலப் பேச்சுக்கள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

வை.கோ. என்றால் மக்களின் நெஞ்சங்களில் உடனடியாகத் தோன்றும் எண்ணம் ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக விடாது உண்மையுடன் போராடும் போராளி என்பதுதான்.
ஆனால், தி.மு..வுடன் உறவு என்பது உங்களது இந்தப் போராளி இமேஜை புரட்டிப் போட்டு விடுகிறதே.

எப்படி உங்களால் இப்படி ஒரு முடிவு அதிலும் அரசியல் தற்கொலைக்கொப்பான முடிவை எடுக்க முடிந்தது..?


2009ல் இலங்கையில் நிகழ்ந்த இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட இராஜபக்க்ஷே மட்டுமே காரணமல்ல..அப்போது ஆட்சியிலிருந்த .மு.கூ. அரசும்,  தான் மற்றும் தனது குடும்பத்தினர்களின் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இனப்படுகொலையைத் தடுக்க எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் அதற்கு உறுதுணையாக இருந்த அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும்தான் என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மை மட்டுமல்லாது தாங்களே தங்கள் வாயால் பலமுறை கூறிய உண்மையும் கூட. ஒரு சில சட்டமன்றத் தொகுதிகளுக்காக அதே கருணாநிதியை தாங்கள் பலவாறாக பாராட்ட முற்படுவதும் அவரோடு தேர்தல் கூட்டணியில் இணைந்து மீண்டும் அவரை முதல்வராக்க முற்படுவதும் தாங்கள்தான் இலங்கைத் தாமிழர்களின் நலன்களுக்காக போராடும் போராளி என்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்கவில்லையா..? யூ டூ வை.கோ..?  You too Vai.Ko ? என்ற கேள்வியை தமிழர்கள் கேட்க வேண்டிய நிலை ஏற்படுகிறதா.. நம்ப முடியவில்லையே.

இலங்கைத் தமிழர் விவகாரங்களில் எப்போதும் துடிப்புடன் முன்னணியில் இருக்கும் நீங்கள் கனிமொழி - ஆனந்தி சசிதரன் விவகாரத்தில் வாயையே திறக்காமல் அமைதி காக்கிறீர்களே. எதற்காக இந்த மௌனம்..? கனிமொழி மீது குற்றம் சொல்லிவிடக் கூடாது என்ற தன்னடக்கமா..? அல்லது இலங்கை தமிழர்களுக்கு கருணாநிதி இழைத்த துரோகச் செயலை மக்களுக்குத் தெரியாமல் மறைக்க வேண்டும் என்ற ஆர்வமா..?உங்கள் தமிழுணர்வின் விலை வெறும் நாலைந்து சட்டமன்றத் தொகுதிகள்தானா..?

இலங்கைத் தமிழர் நலனுக்காக தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்துவரும் பிரதமர் மோடியை குற்றம் சாட்டும் தாங்கள் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாநிதியோடு கை குலுக்க நினைக்கிறீர்களே.. உங்களுக்கு அவமானமாகவில்லையா..? நாகப்பட்டினத்தில் ஏதோ ஒரு சிறு கோயிலில் வைக்கப்பட்ட பிரபாகரனின் உருவச் சிலையை அகற்றியதற்கு பொங்கும் நீங்கள் அந்த பிரபாகரனின் மரணத்திற்கு மறைமுக காரணமாயிருந்தவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறீர்களே.. உங்கள் மனசாட்சி உங்களை குற்றம் சாட்டவில்லையா..?


இலங்கைத் தமிழராவது மண்ணாவது.. பதவிதான் எங்களுக்கு முக்கியம் என்ற முதிர்ந்த நிலையை அடைந்து விட்டீர்கள் போலிருக்கிறதே.

தி.மு..வுடன் கூட்டணி என்றான பின் நீங்கள் எப்படி விடுதலைப் புலிகள், இலங்கைத் தமிழர் நலன் என்பது பற்றியெல்லாம் எப்படி பேசலாம்..? எப்படிபேச முடியும்..?
நாலைந்து சட்டமன்றத் தொகுதிகளுக்காக ( அதிலும் வெல்ல முடியாத தொகுதிகளுக்காக )உங்கள் தமிழின உணர்வை இப்படி அடகு வைத்து விட்டீர்களே.
உங்களை வசைபாட விரும்பவில்லை; உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்,

கு.காந்தி. M.A.B.G.L