Thursday 31 July 2014

மதவெறி அழிவைக் கொண்டு வரும்

காஸா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து,காஷ்மீர் பகுதியில்  ஹுரியத் மாநாடு உட்பட சில பிரிவினைவாத அமைப்புகள் போராட்டங்களையும் வன்முறைத் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.
ஹமாஸ் மீதான தாக்குதல்களை எதிர்த்தும் அதற்காக பழிவாங்கும் வகையிலும் மும்பையில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஒரு பயங்கரவாத அமைப்பு மிரட்டியிருக்கிறது.
இஸ்ரேல் ஹமாஸ் இரண்டும் தங்களுக்கிடையே உள்ள பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள ஒன்றின் மீது ஒன்று தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இந்திய அரசிற்கோ இந்திய மக்களுக்கோ எவ்விதத் தொடர்புமில்லை.இந்நிலையில் இந்தியாவில் ஏன் கலவரங்கள் அடைபெற வேண்டும் ..?அப்பாவி இந்தியர்களுக்கு எதிராக வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாக ஏன் மிரட்ட வேண்டும் ..?
அவர்கள் வேண்டுமானால் பாலஸ்தீனப் பகுதிகளுக்குச் சென்று அங்கே ஹமாஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடட்டும்; அல்லது இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து அங்கே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தட்டும்.
ஏன் இந்தியாவில் வன்முறையை அரங்கேற்ற வேண்டும் ..?
இப்படிப்பட்ட மதவெறியர்கள், முளைச்சலவை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் கருணையே இல்லாமல் களையெடுக்கப்பட வேண்டும்.
ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், லிபியா,ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களை விட இந்தியா, அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள்தான் வளத்துடனும் மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் அமைதியாக வாழ்கிறார்கள் என்பது மறுக்க முடியாத நிச்சயமான உண்மை.

Sunday 27 July 2014

உலகின் முதன்மையானது

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ .மு.கூ. ஆட்சியின்போது, நீதித்துறையில் ஆட்சியாளர்களின் தலையீடு இருந்தது என்று சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்;தமிழகத்தில் மாவட்ட நீதிபதியாக இருந்த அசோக் குமார் என்பவர் மீது கடுமையான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தும் அக்குற்றச்சாட்டுக்களை மத்திய உளவுத் துறையே உறுதிப்படுத்திய பின்பும் கூட அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த தி.மு..முதல்வர் கருணாநிதியின் நிர்ப்பந்தத்தின் பேரில் அந்நீதிபதிக்கு பதவி நீடிப்பும் பதவி உயர்வும் வழங்க .மு.கூ. அரசு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கட்டாயப்படுத்தியதாக கட்ஜூ குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, கட்ஜூவைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்திருந்தாரே தவிர,ஊழல் நீதிபதிக்கு ஆதரவாக தான் எப்போதும் எவ்வித நிர்ப்பந்தமும் அளித்ததில்லை என்று கூறவில்லை.அதோடு மத்திய காங்கிரஸ் அரசின் தயவால் பிரஸ் கவுன்சில் தலைவர் போன்ற பல பதவிகளை அனுபவித்து விட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீது பழி சுமத்தலாமா என்றும் கட்ஜூக்கு கேள்விக்கணை தொடுத்திருக்கிறார்.
ஆனால்,  இதே கேள்வியை கட்ஜூ கருணாநிதியைப் பார்த்துக் கேட்டிருந்தால் அவர் என்ன பதிலளித்திருக்க முடியும் ..?
2005 லிருந்து 2013 வரை காங்கிரஸின் துணையோடு மத்திய அரசில் தன் குடும்பத்தினரை நல்ல பதவிகளில் அமர வைத்து கோடி கோடியாய் மக்கள் பணத்தை தன் குடும்பத்தினர் சுருட்ட வழிவகை செய்து கொடுத்து தன் குடும்பத்தை உலகப் பெரும் பணக்காரர்களின் வரிசையில் சேர்த்து விட்டு, 2006-2011 காலகட்டத்தில் தமிழக சட்டமன்றத்தில் தி.மு.. விற்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலூம் காங்கிரஸை கூட்டணி அரசில் அமைச்சர்களாக சேர்த்துக் கொள்ளாமல் அவர்கள் ஆதரவோடு 5 வருடங்கள் முதல்வர் பதவியை அனுபவித்து விட்டு, கடைசி கட்டத்தில் கூட காங்கிரஸின் ஆதரவை கெஞ்சிக் கேட்டு, தன் மகளை ராஜ்யசபா உறுப்பிராக்கி விட்டு இப்படி பத்தாண்டுகளில் காங்கிரசால் பல நன்மைகளையும் பதவிச் சுகங்களையும் அனுபவித்து விட்டு தேர்தலின்போது காங்கிரசை கூட்டணியில் சேர்க்காமல் கழட்டி விட்டு தனித்து நின்றது பெரும் துரோகமில்லையா என்று கட்ஜூ திருப்பிக் கேட்டிருந்தால் கருணாநிதியின் நிலை என்னவாகியிருக்கும் ..?
அடுத்து, கட்ஜூ, "கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவருக்கிருந்த சொத்து விவரங்களையும் இப்போதைய சொத்து விவரங்களையும் வெளியிடத் தயாரா" என்று கேட்க "இப்போது தனக்கிருக்கும் ஒரே சொத்து கோபாலபுரம் வீடு மட்டுமே " என்று பதிலளித்திருக்கிறார்.
இந்த பதில் 6.5 கோடி தமிழக மக்கள் அனைவரையும் வயிறு குலுக்க சிரிக்க வைத்து சாதனை படைத்திருக்கிறது.

 ஆயிரம் கோடி பத்தாயிரம் கோடி என பதவிகளைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான கோடிகள் குவித்து விட்டு அவற்றை தனது மனைவி, துணைவி, மகன்கள் மகள்கள் பேரன்கள் பேத்திகள் என என அனைவர் பேரிலும் பகிர்ந்து எழுதி வைத்து விட்டு, மீதியுள்ள கோடிகளையும் கட்சி அறக்கட்டளையில் சேர்த்து வைத்து அதற்கும் தனது குடும்பத்தினர்களையே உரிமையாளர்களாக்கி வைத்து, இந்த தள்ளாத வயதிலும் மேலும் சம்பாதிக்க, மீண்டும் ஆட்சிக்கு வந்து தன் குடும்பத்தினர்களை அமைச்சர்களாக்கத் துடிக்கும் கருணாநிதி இப்படிச் சொல்லியிருப்பதுதான் 'உலக மக்கள் இனம் பேசும் சக்தியைப் பெற்றதிலிருந்து இது வரையிலும் அவர்களால் சொல்லப்பட்ட பொய்களில் முதன்மையானது' என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

Sunday 20 July 2014

வீணடிக்கப்படும் மக்கள் பணம்



கடந்த 3 நாட்களாக பாரளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போதுகூட, எதிர்க் கட்சியாய் இருந்த பா... சபையை முடக்கி இருக்கிறது. உலக மகா 1,76,000 கோடி 2ஜி ஊழல், 2ஜி ஊழலையும் மிஞ்சும் நிலக்கரி ஊழல் போன்ற மக்கள் பிரச்னைகளில் இது போல் பாராளுமன்றம் தொடர்ந்து பல நாட்கள் முடக்கப்பட்டது. 
ஆனால், இந்த முறை காரணம் வேறாக இருக்கின்றது. ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிகழ்கிற யுத்தத்தைக் கண்டித்து காங்கிரசும் பிற மதச்சார்பற்ற(?) கட்சிகளும் சபையை நடத்த விடாமல் செய்து வருகின்றன. ஹமாஸ் - இஸ்ரேல் மோதலில்  மோடி அரசிற்கு எவ்விதப் பங்குமில்லை; மோடி அரசு இதற்கு எவ்விதத்திலும் காரணமுமில்லை. இந்நிலையில் மூன்றாம் நாட்டில் நடக்கும் ஒரு யுத்தத்திற்காக இந்தியப் பாராளுமன்றம் ஏன் முடக்கப்பட வேண்டும் ..? இந்திய மக்களின் வரிப்பணம் ஏன் வீணடிக்கப்பட வேண்டும் ..?
ஹமாஸ் - இஸ்ரேல் மோதலில் எகிப்தின் சமரச  உடன்படிக்கையின் அடிப்படையில் ஒரு முறை, .நா. வலியுறுத்தலின் பேரில் ஒரு முறை என 2 முறை இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தது.ஆனால், ஹமாஸ் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு இஸ்ரேல் பதிலடியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் நரேந்திர மோடி அரசின் பிழை என்ன ..? எதற்காக பாராளுமன்றம் முடக்கப்பட வேண்டும் ..? இலங்கையில் ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட ஆயுதங்கள் அளிப்பது உட்பட பல உதவிகள் செய்து தமிழினத்தைக் கருவறுத்த காங்கிரஸ் இப்போது இந்தியா எவ்விதத்திலும் சம்பந்தப்படாத ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்காக இந்தியப் பாராளுமன்றத்தை செயல்படவிடாமல் செய்வது ஏன் ..? நிமிர்ந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கத் துடிப்பது ஏன் ..?பட்ஜெட் தொடர்பாகவும் மற்றும் பல முக்கியப் பிரச்னைகள் சம்பந்தமாகவும் விவாதங்கள் ஆலோசனைகள் நடைபெற விடாமல் தடுத்து சபையை முடக்கி வைத்து நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வது ஏன் ..? 
ஹமாஸ் அமைப்பை ஆதரிப்பதால், இந்தியாவில் முஸ்லீம்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் உட்பட பல போலி மதச்சார்பற்ற கட்சிகள் நினைக்கின்றன.
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியா பலம் பெற்று விளங்கினால் மட்டுமே முஸ்லீம்கள் உட்பட இந்திய மக்கள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி கிடைக்கும்.ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தை ஆதரித்துக் கோஷம் போட்டு விடுவதால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த நன்மையும் கிட்டிவிடப் போவதில்லை.மாறாக, இந்தியாவில் பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழத்தான் இது போன்ற ஆதரவுகள் வழிவகுக்கும்.

இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்னை ஒரு மூன்றாம் நாடு தொடர்பான பிரச்னை. அதை இந்தியப் பிரதமரும் வெளிவிவகாரத் துறையும் நமது நாட்டிற்கு பயன்தரும் வகையிலும் உலக அமைதியைப் பேணும் வகையிலும் சரியான முறையில் அணுகுவார்கள். காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் தங்களது ஓட்டு வங்கி அரசியலுக்காக பாராளுமன்றத்தில் கோஷம் போடுவதாலும் சபையை நடைபெற விடாமல் தடுத்து முடக்குவதாலும் மக்களுக்கு எந்தப் பயனும் கிட்டாது. கோடிக்கணக்கில் மக்கள் பணம்தான் வீணாகும்.