காஸா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத
இயக்கத்திற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து,காஷ்மீர்
பகுதியில் ஹுரியத் மாநாடு உட்பட சில பிரிவினைவாத
அமைப்புகள் போராட்டங்களையும் வன்முறைத் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.
ஹமாஸ் மீதான தாக்குதல்களை
எதிர்த்தும் அதற்காக பழிவாங்கும் வகையிலும் மும்பையில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும்
என ஒரு பயங்கரவாத அமைப்பு மிரட்டியிருக்கிறது.
இஸ்ரேல் ஹமாஸ் இரண்டும் தங்களுக்கிடையே
உள்ள பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள ஒன்றின் மீது ஒன்று தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இந்திய அரசிற்கோ இந்திய மக்களுக்கோ எவ்விதத் தொடர்புமில்லை.இந்நிலையில்
இந்தியாவில் ஏன் கலவரங்கள் அடைபெற வேண்டும் ..?அப்பாவி இந்தியர்களுக்கு எதிராக வெடிகுண்டு
தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாக ஏன் மிரட்ட வேண்டும் ..?
அவர்கள் வேண்டுமானால் பாலஸ்தீனப்
பகுதிகளுக்குச் சென்று அங்கே ஹமாஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராகப்
போரிடட்டும்; அல்லது இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து அங்கே பயங்கரவாதத் தாக்குதல்களை
நடத்தட்டும்.
ஏன் இந்தியாவில் வன்முறையை
அரங்கேற்ற வேண்டும் ..?
இப்படிப்பட்ட மதவெறியர்கள்,
முளைச்சலவை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் கருணையே இல்லாமல் களையெடுக்கப்பட வேண்டும்.
ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,
லிபியா,ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களை விட இந்தியா, அமெரிக்க,
பிரிட்டன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் வாழும்
இஸ்லாமியர்கள்தான் வளத்துடனும் மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் அமைதியாக வாழ்கிறார்கள்
என்பது மறுக்க முடியாத நிச்சயமான உண்மை.