Thursday 23 January 2020

என்ன தவறிருக்கிறது இதில்...?


ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் ஆண்டு விழாவில் பேசும்போது, 1971ல் சேலத்தில் ஈ.வெ.ரா. நடத்திய ஹிந்து எதிர்ப்பு மாநாட்டில் இராமபிரான் மற்றும் பிற ஹிந்துக் கடவுள்கள் இழிவுபடுத்தப்பட்டனர். .. அந்தச் செய்தியை பிற பத்திரிக்கைகள்  எதுவும் வெளியிடவில்லை; துக்ளக் மட்டுமே வெளியிட்டது என்று பேசியிருந்தார். துக்ளக் ஆண்டு விழாவில் துக்ளக்கின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இக்கருத்தை வெளியிட்டிருந்தார்.

இக்கருத்து, ஈ.வெ.ரா. வை இழிவுபடுத்துகிறது என்றும் அதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தி.க., தி.மு.க., மற்றும் அவர்களது ஆதரவு கட்சியினர் பல இடங்களில் வழக்கு தொடுத்தனர்; போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதற்கு அவர், நான் உண்மையைத்தான் சொன்னேன்...மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக அறிவித்து விட்டார்.

இதில் ஈ.வெ.ரா. அவமதிப்பு எங்கிருந்து வந்தது..? அந்த ஊர்வலத்தில் ஈ.வெ.ரா.வலும் மற்றவர்களாலும் ஹிந்துக் கடவுள் சிலைகள் அவமதிக்கப்பட்டன என்பது ஆதாரபூர்வமான உண்மை. அதை பல பத்திரிக்கைகளிலும் சோஷியல் மீடியாக்களிலும் வந்த படங்களும் செய்திகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இப்போது தி.க வினர்களும் மற்றவர்களும் என்ன சொல்ல விழைகிறார்கள்..? ஊர்வலத்தில் ஹிந்துக் கடவுளர்கள் யாரும் அவமதிக்கப்படவில்லை என்றா..? அப்படியானால், அந்த ஊர்வலத்தில் ஹிந்துக் கடவுள் சிலைகள் ஏன் கொண்டுவரப்பட்டன..? தி.க. வினர் ஹிந்துக் கடவுளர்களின் பக்தி ஊர்வலமா நடத்தினார்கள்..?

தி.க. வினர் காலம் காலமாக பகுத்தறிவு என்ற பெயரில், கோடானு கோடி மக்கள் பக்தியுடன் வழிபடும்  ஹிந்துக் கடவுளரையும் ஹிந்து மதத்தையும் நாக்கூசும் வார்த்தைகளால் கேவலமாக விமர்சிப்பதை தங்கள் முழு நேரப் பணியாகச் செய்து வருகின்றனர். இது ஹிந்துக்களை இழிவுபடுத்துவது ஆகாதாம்.. ஆனால், ரஜினிகாந்த் வேறு ஒரு விஷயம் பற்றி பேசும்போது எதேச்சையாக சேலம் மாநாட்டைப் பற்றி குறிப்பிட்டால் அது ஈ.வெ.ரா. வை அவமானப்படுத்துவது ஆகுமாம்.

என்ன முட்டாள்தனமான சிந்தனை இது..? 
எந்த நாட்டிலுமே பெரும்பான்மை மதத்தினர்கள்தான் மேலாண்மை செலுத்துவார்கள். ஆனால், நம் நாட்டில் பெரும்பான்மை மதத்தினரான ஹிந்துக்கள் நசுக்கப்படுகிறார்கள்; அவமானப்படுத்தப்படுகிறார்கள்; ஹிந்து மதம் சிறுமைப் படுத்தப்படுகிறது.

இந்நிலையில் குனியக் குனியக் குட்டுவது போல ஹிந்து மதம் இழிவுபடுத்தப்படுவதை சொல்வது கூட குற்றம் என்பது போல தி.க. வினரின் பேச்சும் செயலும் அமைந்திருக்கிறது. தி.க.வின் இந்த அராஜகச் செயலுக்கு திமுக வும் காங்கிரசும் அதன் உதிரிக் கட்சிகளும் துணை போகின்றன.

யானைக்கு தன் பலம் தெரியாது என்பார்கள். அந்த தன் பலமறியாத யானையின் நிலையில் ஹிந்துக்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதனாலேயே இவை சாத்தியமாகியிருக்கிறது.
குனிய குனிய குட்டுபவன் மட்டுமல்ல...குட்ட குட்ட குனிபவனும் கூட முட்டாள்தான் .
இந்த முட்டாள்தனத்தை ஹிந்து சமுதாயம் கைவிடும்போது, எல்லாம் மாறும். வரும் காலம் அந்த மாற்றத்தை சாதிக்கும்.





-