அமெரிக்க அதிபர்
பராக் ஒபாமா
இந்தியாவிற்கு வருவதைக்
கண்டித்து,நாட்டின்
பல இடங்களில்
பல்வேறு இடதுசாரி
அமைப்பினரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு 'போஸ்டர்'கள் ஒட்டியிருக்கின்றனர்; போராட்டமும் நடத்தியிருக்கின்றனர்.
சீனா இந்தியாவிற்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான
ச.கி.மீ.நிலப்பரப்பை ஆக்ரமிப்பு
செய்து தன்வசம்
வைத்துக் கொண்டிருக்கிறது; அதோடு அருணாச்சலப்
பிரதேச மாநிலத்தையும்
தனக்குரியது என்று
கூறி அடாவடித்தனம்
செய்து வருகிறது;இந்திய எல்லைக்குள்
சீனப்படைகள் அடிக்கடி
ஊடுருவலையும் நடத்திவருகின்றன .இவை மட்டுமல்லாமல்,
பாகிஸ்தானுக்கு அணு
ஆயுத தொழில்நுட்பம்
உட்பட பல்வேறு
நவீன ஆயுதங்களையும்
அளித்து அந்நாட்டை
இந்தியாவிற்கு எதிராக
கொம்பு சீவி
விட்டு வருகிறது
சீனா.
அதேபோல பாகிஸ்தானும்
இந்தியாவிற்கு சொந்தமான
ஜம்மு காஷ்மீரில்
ஒரு பகுதியை
ஆக்ரமித்து வைத்திருப்பதோடு மத பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி
அளித்து, காஷ்மீரில்
மட்டுமல்லாது நாட்டின்
பிற பகுதிகளிலும்
ஊடுருவ வைத்து
அப்பாவி இந்திய
மக்களுக்கு எதிராக
பயங்கரவாதச் செயல்களை
நடத்தி வருகிறது.
இதன் மூலம் இந்தியா
மீது மறைமுகப்
போரையே நடத்தி
வருகின்றது பாகிஸ்தான்.
ஆனால், இவ்விரு
நாடுகளுக்கும் எதிராக
இந்த இடதுசாரிகளும்
கம்யூனிஸ்ட்களும் ஒரு
முறை கூட
கன்டனம் தெரிவித்ததில்லை; இவற்றிற்கு எதிராக
ஆர்ப்பாட்டங்களும்
நடத்தியதில்லை.சீன
அதிபர் இந்தியாவிற்கு
வருகை தந்திருந்த
போதும் அவரது
வருகையை எதிர்த்து
நாட்டின் எந்த
முலையிலும் ஒரு
சிறு ஆர்ப்பாட்டம்
கூட நடத்தியதில்லை.
இந்திய எல்லைக்குள்
சீனாவின் ஊடுருவல்களை
எதிர்த்து சிறு
முணுமுணுப்பு கூட
காட்டியதில்லை இந்த
இடதுசாரிகள்.
நம் நாட்டிற்கு
எதிராக செயல்படும்
சீனா பாகிஸ்தான்
போன்ற நாடுகளுக்கு
எதிராக போராட
முன்வராத இக்கட்சிகள்
அமெரிக்கா என்றாலே
அலறித் துடித்து
ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன;
இவர்களது இப்போராட்டங்கள் இந்தியாவின் நலனை
அடிப்படையாகக் கொண்டதில்லை
என்பதே உண்மை.