Tuesday 8 April 2014

இது ஒரு அச்ச உணர்வின் வெளிப்பாடு



.

         நரேந்திர மோடி இங்கே ( தமிழகத்திற்குள் )நுழையக் கூடாது; மோடிக்கு இங்கே இடமில்லை என்று கோவையில் நிகழ்ந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியிருக்கிறார்.

         மோடியை ஒரு வகுப்புவாதியாகவோ மதவாதியாகவோ கருணாநிதி என்றுமே எண்ணியதில்லை. ஏனெனில், மத்திய பா... அரசில் கருணாநிதியின் 'மனசாட்சி' முரசொலி மாறன் உட்பட பல தி.மு..வினர் அமைச்சர்களாய் இருந்தபோதுதான் குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் எரிப்பும் அதன் தொடர்ச்சியாக பெரும் கலவரங்களும் நிகழ்ந்தன. அப்போதெல்லாம் கருணாநிதியோ அவரது மனசாட்சி மாறனோ இக்கலவரங்களுக்காக மோடியை குற்றம் சாட்டியதேயில்லை. அதற்காக மத்திய பா... அரசிலிருந்தோ பா... கூட்டணியிலிருந்தோ விலகியதுமில்லை. அக்கலவரங்களுக்கு மோடிதான் காரணம் என்றால் மதச்சார்பற்ற கொள்கையில் என்றும் உறுதி(?)யோடிருக்கும் கருணாநிதி பா... கூட்டணிக்கு தனது ஆதரவை வாபஸ் பெற்றிருக்க மாட்டார..? குஜராத் கலவரங்கள் நிகழ்ந்தது 2002ல்; ஆனால், கருணாநிதி 2004 வரை பா... கூட்டணியில் தொடரத்தானே செய்தார். எனவே மோடியை ஒரு வகுப்புவாதியாகவோ முஸ்லீம்களுக்கு விரோதியாகவோ கருணாநிதி கருதவில்லை என்பது நிச்சயமான உண்மை.

         அதோடு இந்த மக்களவைத் தேர்தலில் பாஜ..வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின்பும் பா...வோடு கூட்டணி வைப்பதற்காக கருணாநிதி பல வகைகளிலும் முயற்சித்தது அனைவரும் அறிந்த ஒன்று.சமீபத்தில் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூட 'மோடி ஒரு சிறந்த நிர்வாகி.. அதனால்தான் குஜராத் மக்கள் தொடர்ந்து 3 முறையாக அவரை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் ' என்று அவர் மோடியைப் பாராட்டியிருந்ததையும் யாரும் மறக்க முடியாது.


         அப்படியிருக்க திடீரென்று கருணாநிதி மோடி பிரதமராவதற்கும், தமிழகத்தில் நுழைவதற்கும் ஏன் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருக்கிருக்கும் அச்சம்தான்.

         சிறந்த நிர்வாகத் திறமையும் ஊழல் கறை படியாதவருமான மோடி பிரதமராகி விட்டால், 2ஜி மெகா ஊழலில் அடித்த ஆயிரக்கணக்கான கோடிகள் விவகாரமும் அதில் சம்பந்தப்பட்டவர்களின் முழு விவரங்களும் வெளிவந்து விடும் என்ற அச்சம் கருணாநிதிக்கு வந்திருக்கிறது. அதோடு,.மு.கூ. ஆட்சியின்போது சம்பாதித்தது போல இனி கோடி கோடியாய் மக்கள் பணத்தைச் சுருட்ட முடியாது என்ற கவலையும் அவருக்கிருக்கிறது.

         இந்த அச்சம் மற்றும் கவலையின் காரணமாகவே கருணாநிதி திடீரென்று இப்படி மோடி தமிழகத்திற்குள்ளேயே நுழையக்கூடாது என்று ஆவேசப்பட்டிருக்கிறார். ஆனால், மோடி பிரதமராவதும் உறுதி; பிரதமராக தமிழகத்திற்கு வருவதும் உறுதி.

Thursday 3 April 2014

பரிணாம வளர்ச்சி.



வாரணாசி தொகுதியில் மோடியைத் தோற்கடிப்பதே தனது இலட்சியம் என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி வாராணாசியில் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போவது நிச்சயமான ஒன்று. அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆனால், கெஜ்ரிவாலின் 'பரிணாம வளர்ச்சி'தான் பரிதாபத்திற்குரியதாயிருக்கிறது.

'ஊழலுக்கெதிரான இந்தியா' என்ற அமைப்பின் மூலம் பிரபலமான கெஜ்ரிவால், ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா கொண்டுவர வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அன்னா ஹஸாரே மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரத்தத்தில் கலந்து கொண்டு ஊழலுக்கெதிரான போராளியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு அதன் காரணமாக டில்லியில் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களை வெல்லுமளவிற்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த கெஜ்ரிவால்,

இப்போது ஊழலுக்கெதிரான இயக்கத்தையெல்லாம் மூட்டை கட்டி மூலையில் போட்டுவிட்டு,

ஊழல் ஆட்சியை அப்புறப்படுத்த மக்களின் பேராதரவுடன் போராடும்  நரேந்திர மோடியை தோற்கடிப்பதே தனது இலட்சியம் என்று அறிவிக்குமளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டிருப்பது பரிதாபத்திற்குரிய விஷயம்.
அவரது வேஷம் கலைந்து நிஜ உருவம் இப்போது முழுமையாக அம்பலத்திற்கு விட்டது.

ஊழலை ஒழிக்க புறப்பட்டு விட்டதாக ஆர்ப்பாட்டம் காட்டியவர் இப்போது ஊழலை ஒளித்து வைப்பதற்கு  முழுமூச்சுடன் களத்தில் இறங்கிவிட்டார்.

மக்கள் அவரது சின்னத்தின் மூலம் அவரையும் அவரது இயக்கத்தையும் ஒதுக்கித் தள்ளத் தயாராகி விட்டார்கள்.

ஏமாற்று வேலை - ஒரு தொடர்கதை




வரும் மக்களவைத் தேர்தலுக்காக கருணாநிதி வெளியிட்ட தி.மு..வின் தேர்தல் அறிக்கையில், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே சமயம் சென்னையில் நிகழ்ந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி தேர்தலுக்குப் பின் தி.மு.., காங்கிரசை ஆதரிக்கும் என்று அறிவித்திருக்கிறார். 

காங்கிரஸ் ஆட்சியில்தான் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு வகை செய்யும் மசோதா சட்டமாக்கப்பட்டது. அதிலும் தி.மு.. அம்மசோதாவை ஆதரித்ததாலேயே அம்மசோதா சட்டமானது. இந்நிலையில் தேர்தலுக்குப் பின் மீண்டும் காங்கிரசை ஆதரிக்கப்போவதாகக் கூறும் கருணாநிதி எப்படி சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தடுக்க முடியும்..?

மேலும், 2006 சட்டமன்றத் தேர்தலின் போதும், கருணாநிதி தான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 'நடுத்தர குடும்பத்தினர்களின் சுய வேலைவாய்ப்புத் திட்டமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம்' என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி 2006ல் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து விட்டு காங்கிரசோடு சேர்ந்து மக்களவையில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை சட்டமாக்கிய கருணாநிதி 2014லும் அதே போல ஒரு வாக்குறுதியை தேர்தல் அறிக்கையின் மூலம் கொடுத்து அதே மூச்சில் தேர்தலுக்குப் பின் காங்கிரசை ஆதரிப்போம் என்று கூறுகிறார் என்றால் இந்த வாக்குறுதியின் மூலம் அவர் கோடிக்கணக்கான சில்லறை வியாபாரிகளை எப்படி ஏமாற்றுகிறார் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.  

அதே போல , தனியார் தொழில் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டிற்கு தி.மு.. பாடுபடும் என்று தேர்தல் அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.
கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமாக கணக்கற்ற தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இத்தொழில் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதா..? இல்லையே.

மொத்தத்தில் தி.மு..வின் அரசியலில் ஏமாற்று என்பது எப்போதும் ஒரு தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே தி.மு.. வை இம்முறையும் மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேன்ன்டும். அதுதான் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் நல்லது.