சீனப்
படையினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்
லடாக் பகுதியில்
இந்திய எல்லைக்குள்
சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு
உள்ளே ஊடுருவி
முகாம் அமைத்திருப்பதாக
செய்திகள் கூறுகின்றன.
சீனா இப்படி
ஊடுருவல்களில் ஈடுபடுவது இது முதன் முறையன்று;
இதற்கு முன்பும்
பல முறை
இவ்வாறு நடந்திருக்கிறது.ஒவ்வொரு முறையும்
இருதரப்பு பேச்சு
வார்த்தைகள் நிகழும்; சீனா வெளியேறும்; பின்பு
சில வாரங்களுக்குப்
பின் மீண்டும்
ஊடுருவும். இப்படி இது ஒரு தொடர்கதையாகவே
ஆகிவிட்டது. இந்தியப் பகுதிகள் பலவற்றை தனக்குரியதாக
நிலைநாட்டிக் கொள்ள விரும்புகிறது சீனா. அதற்காகத்தான்
இப்படி அடிக்கடி
எல்லை தாண்டிய
ஊடுருவல்களில் ஈடுபடுகிறது. சீனாவின் இந்தப் போக்கு
வன்மையான கன்டனத்திற்குரியது.
சீனா
ஒரு ஆக்ரமிப்பு
மனப்பான்மை கொண்ட நாடு; திபெத்தை ஆக்ரமித்துக்
கொண்ட அதன்
வெறி இன்னும்
தீர்ந்தபாடில்லை. ஆனால், இந்தியா(அரசு)சமாதானம்
என்ற பெயரில்
அண்டை நாடுகளிடம்
மிக மிக
மென்மையான அணுகுமுறையை
கடைப்பிடித்து வரும் நாடு. இதனால்தான் சீனா
தொடர்ந்து இத்தகைய
காரியங்களில் ஈடுபட்டுவருகிறது. 1962ல் இந்தியா மீது
படையெடுத்து ஆயிரக்கணக்கான ச.கி.மீ. பரப்புள்ள நமது
நிலப்பரப்பை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்
சீனா, நமது
மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல்ப் பிரதேசத்தையும் தனக்குரியது
என்று சொந்தம்
கொண்டாடிவருகிறது.
சீனாவின்
தொடர்ச்சியான இத்தகைய ஆக்ரமிப்புகளுக்கு முடிவுகட்டப்பட வேண்டும்.
உலக அரங்குகளில்
சீனாவின் ஆக்ரமிப்பு
நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதோடு இந்தியாவிற்கு
ஆதரவாக அமெரிக்கா
உட்பட உலக
நாடுகளின் ஆதரவைத்
திரட்ட வேண்டும்.
பேச்சுவார்த்தைகள் பலனளிக்காவிட்டால் படைபலத்தின் மூலம் அவர்கள் ஊடுருவல்
செய்த பகுதிகளிலிருந்து
வெளியேற்றப்பட வேண்டும்.
ஒவ்வொரு
நாடும் தனது
எல்லைகளைப் பாதுகாக்க அனைத்து வழிமுறைகளையும் கடைப்பிடிக்க
உரிமை பெற்றவை.
அதற்காகத்தான் இலட்சக்கணக்கான கோடிகளை செலவளித்து இராணுவத்தை
உருவாக்குகின்றன.
இந்தியா
ஒரு அமைதியை
விரும்பும் நாடாகவே இருக்கட்டும்; அதற்காக நாட்டின்
எல்லைகள் ஆக்ரமிக்கப்படுவதை
பார்த்துக் கொண்டு அமைதி பேண வேண்டும்
என்று எந்த
அவசியமுமில்லை. நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கத்தான்
அரசும் இராணுவமும்
இருக்கின்றன. அவை இரண்டும் நாட்டைக் காக்கும்
தனக்குரிய கடமையை
உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும். 120 கோடி இந்தியர்களும்
ஒற்றுமையுடன் அவற்றின் பின் நிற்பார்கள்.
இது
1962 அல்ல; இந்தியா ஒரு அணு வல்லரசு
நாடு என்பதை
தக்க முறையில்
சீனாவுக்கு எடுத்துரைப்பது அவசியம்.