Tuesday 15 November 2016

தேசம் முன்னேற ஒன்றுபடுவோம்.

பெரும் பணமுதலைகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை  வெளியில் கொண்டுவருவதற்காக, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் இந்தியாவிற்குள் புழக்கத்தில் விட்டிருக்கும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக, பயங்கரவாதிகள் வசமிருக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை செல்லாததாக்க இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக 500ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இத்திட்டம் சிறப்பானது; பாராட்டுக்குரியது; புரட்சிகரமானது; சாதாரண மக்களின் நலனையும் ஊழலை ஒழிப்பதையும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கிலுமானது..
பிரதமர் மோடியின் இந்த திட்டம் பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. இதுபற்றி சமீபத்தில் மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 82% மக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இத்திட்டத்தை செயல் படுத்தும்போது, செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகள் முழுமையாக புழக்கத்தில் வருவதற்கான கால இடைவெளியிலான சில நாட்கள் சாதாரண மக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது நிச்சயமான உண்மை. ஆனால், இத்திட்டத்தைனால்,பெரும் இழப்பிற்காளாகப்போவது, பெரும் கருப்பு பண முதலைகளும் கள்ள நோட்டுப் பேர்வழிகளும் பயங்கரவாத இயக்கங்களும்தான்..
இத்திட்டம் பெரிதும் வரவேற்கத்தக்கதாயிருந்த போதிலும் சாமானிய மக்களின் தற்காலிக சிரமத்தை சுட்டிக்காட்டி சிலர் இதை எதிர்க்கின்றனர்.

1) ஹவாலா, கள்ளக்கடத்தல் மோசடிகளில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுக்கு துணையாயிருப்போர்.
8)உள்நாட்டு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவைகளுக்கு பண அளவிலும் மன அளவிலும் ஆதரவாயிருப்பவர்கள்.
3)மதவெறியின் அடிப்படையில் மோடியை விரும்பாதவர்கள்
4) தேசத்தின் முன்னேற்றத்திற்கு தடையாயிருப்பவர்கள்.
5)பெரும் ஊழல் சக்திகள்.
6)பெரும் கருப்பு பண புள்ளிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள்.
7)இந்தியா இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வளர்ச்சி பெற்று பெரும் வல்லரசாவதை விரும்பாத சீனாவின் ஆதரவு இயக்கங்கள்
8)மதத்தின்  அடிப்படையில் பாகிஸ்தானின் ஆதரவாளர்களாயிருப்பவர்கள்.
9) கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பாளர்கள்.

இத்தகையோர்கள்தான் பல்வேறு பொய்களைக் கூறி இத்திட்டத்தை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
இத்தகைய பொய்ப்ப் பிரச்சாரங்களை புறக்கணியுங்கள்;தற்காலிக சிரமங்களைப் பொருட்படுத்தாது தேசம் முன்னேற ஒத்துழையுங்கள்;

தேசத்தின் முன்னேற்றம் நமது முன்னேற்றம்.