ஊழலுக்கு எதிராக
சமூக
சேவகர்
அன்னா
ஹஸாரே
நடத்திய
போராட்டத்தின்
மூலமாக
பிரபலமான
கெஜ்ரிவால்,
தனிக்கட்சி
ஆரம்பித்து,
டில்லி
சட்டமன்றத்
தேர்தலில்
கணிசமான
இடங்களைப்
பிடித்து,காங்கிரசின்
ஆதரவோடு
ஆட்சிக்கும்
வந்தார்.
ஊழலுக்கு
எதிராய்
இயக்கம்
நடத்தியவர்
ஊழலின்
உறைவிடமாயிருந்த
காங்கிரசின்
ஆதரவுடன்
பதவியில்
அமர்ந்த
போதே
அவரது
ஊழல்
எதிர்ப்பு
என்பது
ஒரு
ஏமாற்று
வேலை
என்பதை
மக்கள்
புரிந்து
கொண்டனர்.
இந்நிலையில் மக்களவைக்குத்
தேர்தல்
வர,
அவசர
அவசரமாக
டில்லி
முதல்வர்
பதவியை
இராஜினாமா
செய்த
கெஜ்ரிவால்,
தனது
கட்சியின்
சர்பாக
நாடு
முழுக்க
400க்கும்
மேற்பட்ட
வேட்பாளர்களை
நிறுத்தினார்.
ஆனால்,
ஒரு
சில
தொகுதிகளைத்
தவிர்த்து
அனைத்து
தொகுதிகளிலும்
அக்கட்சி
டிபாசிட்
இழந்தது.
மிகப்பெரும்
ஊழல்
அரசியல்வாதிகளையெல்லாம்
தவிர்த்துவிட்டு,
13 ஆண்டுகாலமாக
குஜராத்தில்
ஊழலற்ற
நேர்மையான
மக்கள்
நல ஆட்சியை அளித்து
வந்த,நாட்டின்
பிரதமர்
பதவிக்கு
மக்களால்
நியமிக்கப்பட்ட
நரேந்திர
மோடியை
எதிர்த்துப்
போட்டியிட்டு
படுதோல்வியைத்
தழுவினார்
கெஜ்ரிவால்.
இப்போது எப்படியாவது
மீண்டும்
டில்லியின்
முதல்வராகிவிடத்
துடிக்கிறார்
கெஜ்ரிவால்.
தான்
டில்லியின்
முதல்வர்
பதவியை
விட்டு
விலகியபோது,
உடனடியாகச்
சட்டசபையைக்
கலைக்க
டில்லி
கவர்னருக்கு
வேண்டுகோள்
விடுத்தார்.
அதற்காக
நீதிமன்றத்தில்
வழக்கும்
தொடுத்தார்.
இப்போது
சட்டமன்றத்தைக்
கலைக்கக்
கூடாது
என்று
அதே
கவர்னருக்கு
கடிதம்
கொடுத்திருப்பதோடுதன்னை
எப்படியாவது
முதல்வராக்க
வேண்டும்
என்று
காங்கிரசின்
காலில்
விழாத
குறையாகக்
கெஞ்சிக்
கொண்டிருக்கிறார்.
டில்லியின் முதல்வராயிருந்த
ஷீலா
தீட்சீத்தை
தோற்கடித்ததனால்,
அவருக்கு
ஏற்பட்ட
ஆணவம்,
அகம்பாவம்
மற்றும்
தனக்கு
மக்களிடம்
அபரிமிதமான
செல்வாக்கு
இருக்கிறது
என்ற
குருட்டு
நம்பிக்கை
இவற்றின்
காரணமாக
வாரணாசியில்
மோடியை
எதிர்க்க
முனைந்தார்.
வாரணாசி
மக்கள்
கொடுத்த
பலத்த
அடியில்
அதிர்ந்து
போய்
மீண்டும்
டில்லிக்கு
ஓடிவந்து
மக்களால்
நிராகரிக்கப்பட்ட
காங்கிரசின்
காலில்
விழுந்து
என்னை
முதல்வராக்குங்கள்...
என்னை
முதல்வராக்குங்கள்
என்று
கெஞ்சிக்
கொண்டிருக்கிறார்.
அவர் இனி
ஒருக்காலும்
டில்லியின்
முதல்வராகப்போவதில்லை;
ஆனால்,
இந்தியாவின்
'மட்டரகமான
அரசியல்வாதி'களின்
முதல்வராக
மாறியிருக்கிறார்.