23/7/2016ல் ஆப்கானிஸ்தான் காபூலில்
தங்கள் பகுதியில் மின்வசதி செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ஹஸாரா என்னும் சிறுபான்மையின
மக்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சுமார் 80
பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்..
22/7/2016 அன்று ஜெர்மனியின் ஒரு வணிக வளாகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி அப்பாவி மக்கள் கூட்டத்தின் மீது சரமாரியாகச் சுட்டதில் 15 பேருக்கும் மேல் பலியாகியிருக்கின்றனர். அதேபோல
11/6/2016 அன்று ஜெர்மனியில் ஓடும் இரயிலில் ஒரு இஸ்லாமிய மத வெறியன் இரயிலில் பயணம்
செய்தவர்கள் மீது கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் 5 அப்பாவிகள் பலத்த காயமடைந்தனர்.
14/7/2016 அன்று ஃப்ரான்ஸின் தேசிய தின விழாவில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தின் மீது ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்று பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 90 பேரை கொன்று குவித்திருக்கிறான்..
2/1/2016 அன்று பங்களாதேஷ் ஒரு உணவு விடுதியில் நுழைந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், அங்கிருந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்து சுமார் 22 பேர் வரை கழுத்தை அறுத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொன்று குவித்திருக்கின்றனர்.
கடந்த 3 வாரங்களில் உலக அளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சில மேலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் மதவெறி பிடித்த இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்குள்ளனவர்கள், கொல்லப்பட்டவர்கள் அனைவருமே அப்பாவிகள் ஆவர். எவ்விதக் காரணமுமின்றி இவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்று காஷ்மீரில் நிலவும் அமைதியின்மை மற்றும் வன்முறைக்
கலவரங்களுக்கும் பாகிஸ்தானின் தூண்டுதலினால், இஸ்லாமிய
பயங்கரவாதிகளால் மத அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்களே காரணமாயிருக்கின்றனர். பயங்கரவாதத்திற்கு மதமில்லை
என்ற வார்த்தைகள் அர்த்தமிழந்து கொண்டிருக்கின்றன.. இதை தங்களது சாகசச் செயல் என்று அவர்கள் நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஏதும் இருக்க முடியாது.
உலகின் எந்தப் பகுதியிலும் தங்களால் நுழைந்து பிற மதத்தினர்களை கொன்று குவிக்கும் சக்தி தங்களுக்கு உண்டு என்று இஸ்லாமிய பயங்கரவாதிகள் நினைத்துக் கொள்வது இதே சக்தி பிறமதத்தினர்களுக்கும் உண்டு என்பதை அவர்கள் மறந்துவிட்டதன் விளைவே. துப்பாக்கி ஏந்திய பிற மதத்தினர்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினர்களாக வாழும் பகுதிகளுக்குள் சென்று நூற்றுக் கணக்கில் அப்பாவி முஸ்லீம்களை
கொன்று குவிக்க முடியாதா..?ஆயுதம் ஏந்திய தனி
ஒருவன் நினைத்தால் கூட முடியும். இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம், இஸ்லாமியர்கள்
என்றாலே பயங்கரவாதிகள் என்று உலக மக்கள் நினைக்குமளவிற்கு ஒரு பயங்கர சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியர்கள் என்றாலே அண்டை வீட்டுக்காரர்கள் சந்தேகக் கண்னுடனும் வெறுப்புடனும் பார்க்கும் சூழ்நிலையை இந்த பயங்கரவாதிகள் உருவாக்கி
விட்டிருக்கிறார்கள்.
இந்தப் பயங்கரவாதத்தால் உலக நாடுகள் அனைத்துமே பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றால் அது மிகையாக இருக்க முடியாது. மதவெறியால் மூளைச்சலவை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களும் சிறுவர்களும் உலகின் ஆபத்தாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு போராடும் காலகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.