தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தின்
இறுதியில் உரையாற்றிய
கருணாநிதி நம்பிக்கைத்
துரோகம் செய்த
காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு
முன்பு, ஜெனிவாவில்
நிகழ்ந்த மனித
உரிமைக் கமிஷன்
கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பது
தொடர்பான விஷயத்தில்
கூட இதே போல காங்கிரஸ்
உறவைத் துண்டித்துக்
கொள்வதாக அறிவித்திருந்தார்;
ஆனால், அடுத்த சில வாரங்களுக்குள்ளேயே தனது மகள்
கனிமொழியை ராஜ்ய
சபா உறுப்பினர்
ஆக்குவதற்காக காங்கிரஸ் 'கை'யின் உதவியை
நாடினார். சமீபத்தில்
நிகழ்ந்த ஏற்காடு
இடைத் தேர்தலில்
கூட தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்க
காங்கிரசிடம் வலியப் போய் ஆதரவு கேட்டார்.ஆனால், மீண்டும் இப்போது
2ஜி ஊழல்
விவகாரத்தில் தனது மகள் கனிமொழியை காங்கிரஸ்
காப்பற்றவில்லை என்ற காரணத்தைக் கூறி காங்கிரஸ்
உறவைத் துண்டித்துக்
கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
கருணாநிதியின் அரசியல் நடவடிக்கைகள்
அனைத்தும் அவரது
குடும்பத்தினர்களின் நலனை மையமாக
வைத்தே அமைகின்றன
என்பதை அவரது
இந்தப் பேச்சு
தெளிவாகப் புலப்படுத்துகிறது.
கனிமொழி மீது 2ஜி
ஊழல் தொடர்பான
சி.பி.ஐ. நடவடிக்கைகள்
கடந்த சட்டமன்ற்த்
தேர்தலுக்கு ( 2011 )முன்பே ஆரம்பித்து
விட்டன. ஆனால்,
இதுவரை கருணாநிதி
காங்கிரஸ் கூட்டணியில்தான்
நீடித்து வந்தார்.
சோனியா காந்தியை
சொக்கத் தங்கம்
என்றும் பசிப்பிணி
தீர்த்த மணிமேகலை
என்றும் பலவாறாகப்
போற்றிப் பணிந்து
வந்தார். ஏனெனில்
அப்போது கூட்டணியை
முறித்துக் கொண்டால் 2ஜி ஊழல் விஷயத்தில்
தனது குடும்பத்தினர்
மீதான நடவடிக்கைகளை
காங்கிரஸ் அரசு
தீவிரப்படுத்தி விடும் என்ற அச்சம் அவருக்கிருந்தது.
ஆனால், இப்போது நிலைமை
மாறியிருக்கிறது; விரைவில் பாராளுமன்றத்திற்கு
தேர்தல் நிகழவிருக்கின்றது;
டில்லி, இராஜஸ்தான்,
ம.பி.,சட்டிஸ்கர் மாநிலத்
தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் தோற்கும்
குதிரை என்பதை
அவருக்கு உணர்த்தியிருக்கின்றன.
எனவே, இதுவரை காங்கிரசின் 'கை'யைபிடித்துக் கொண்டிருந்த
அவர் இப்போது கழுத்தைப் பிடிக்கத் தயாராகி
விட்டார்.
2004 லும் அப்படித்தான்; 5 வருடங்களாக
பா.ஜ.க. கூட்டணியில்
இருந்து மத்திய
அரசில் பதவி
சுகங்களை அனுபவித்து
விட்டு தேர்தலுக்கு
சில மாதங்களுக்கு
முன்பு முரசொலி
மாறன் மறைவிற்குப்
பின் அவரது
மகனும் தனது
பேரனுமான தயாநிதி
மாறனுக்கு வாஜ்பாய்
மத்திய கேபினட்
அமைச்சர் பதவி
தர மறுத்து
விட்டார் என்ற
காரணத்திற்காக சோனியாவுடன் போய் சேர்ந்து கொண்டார்.
பா.ஜ.க.வுடனான இந்தக்
கூட்டணி விஷயமாகக்
கூட கருணாநிதி
தனது உரையில்
குறிப்பிட்டிருக்கிறார். வாஜ்பாய் நமது
நண்பராக இருந்த
காரணத்தால்தான் அப்போது கூட்டணி வைத்துக் கொண்டதாக
அவர் பேசியிருக்கிறார்.
அப்படியானால், 2004 தேர்தலிலும் கூட
பா.ஜ.க. வாஜ்பாயைத்
தானே பிரதமராக
அறிவித்தது.. கருணாநிதி ஏன் வாஜ்பாயைப் புறக்கணித்து
விட்டு சோனியாவிடம்
போய்ச் சேர்ந்து
கொண்டார்..?
1999 லிருந்து 2003 இறுதி வரை
கருணாநிதிக்கு நண்பராய் இருந்த வாஜ்பாய் 2004ல்
விரோதியாகி விட்டார்.2004 ஜனவரி முதல் கருணாநிதிக்கு
சொக்கத் தங்கமாயிருந்த
சோனியா காந்தி
இப்போது பித்தளையாகி
விட்டார். இந்த
மாறுதல்களுக்கு முழுக்க முழுக்க காரணம் கருணாநிதியின்
தனது குடும்ப
நலன் சார்ந்த
அரசியலே. இப்போது
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர்
மோடியை விமர்சித்திருக்கும்
கருணாநிதிக்கு, 2014 ஜூனில் மோடி பிரதமரான பின் 2ஜி
வழக்குகளிலிருந்து கருணாநிதியின் குடும்பத்தினரை
காப்பாற்ற உறுதி
கொடுத்தால்.,. தன் அமைச்சரவையில் தி.மு.க. வைச்
சேர்த்துக் கொண்டு, கருணாநிதியின் குடும்பத்தினருக்கு பணம் சம்பாதிக்க வசதியான நல்ல
இலாக்காக்களை வழங்கினால் . அதே
மோடி கூட
சொக்கத் தங்கமாக
காட்சியளிப்பார்.
அவரது
இந்த
குடும்ப நலன்
சார்ந்த இது போன்ற அரசியல்
தந்திரங்கள் என்றுமே தொடர்கதையாக தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.