மானிய விலையில் வழங்கப்படும் சமையல்
வாயு
சிலிண்டர்களின்
எண்ணிக்கையை
ஒரு
குடும்பத்திற்கு
ஒரு
வருடத்திற்கு
9லிருந்து
12 ஆக
உயர்த்தி
மத்திய
அரசு
உத்தரவிட்டிருக்கிறது.
இது
ஒரு
சரியான
நடவடிக்கையே.
ஆனால்,
இந்த
12 என்பது
என்றும்
12ஆகவே
தொடருமா
அல்லது
வரவிருக்கும்
மக்களவைத்
தேர்தலில்
ஒருவேளை
காங்கிரஸ்
வெற்றி
பெற்று
விட்டால்(?) மீண்டும்
9ஆக
குறைக்கப்பட்டு
விடுமா
என்பதுதான்
சிந்திக்க
வேண்டிய
விஷயம்.
ஏனெனில், ராகுல் 9 சிலிண்டர்கள்
ஒரு
குடும்பத்திற்கு
போதாது;
அதை
12 ஆக
உயர்த்த
வேண்டும்
என்று
பிரதமருக்கு
வேண்டுகோள்
விடுத்ததாகவும்
பிரதமரும்
அதை
ஏற்றுக்
கொண்டு
உடனடியாக
அமுல்படுத்தியதாகவும்
செய்திகள்
கூறுகின்றன.
ராகுல் மக்கள் நலனில் அக்கறையுடன் இருக்கிறார்
என்ற
ஒரு
தோற்றத்தை
உருவாக்கிக்
காட்ட
இந்த
நாடகம்
நடத்தப்பட்டிருக்கிறது.
ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்
மட்டுமே
மானிய
விலையில்
வழங்கப்படும்,
அதற்கு
மேலும்
தேவைப்பட்டால்
மானியம்
வழங்காத
சிலிண்டர்களையே
மக்கள்
அதிக
விலை
கொடுத்து
வாங்கிக்
கொள்ள
வேண்டும்
என்ற
புதியதோர்
முறையை
ஐ.மு.கூ.அரசு
2012 செப்டம்பரில்
அறிவித்தது.
அந்த சமயத்தில் ராகுல் காங்கிரஸின் நிர்வாகியாகத்தான்
இருந்தார்.
பிரதமர்
உட்பட
மத்திய
அமைச்சர்கள்
அனைவருமே
அவருக்கு
கட்டுப்பட்டவர்களாகத்தான்
இருந்தனர்.
ஆனால்,அப்போது
ராகுல்
6 சிலிண்டர்கள்
போதாது;
அதை
12 ஆகவோ
அல்லது
9 ஆகவோ
உயர்த்த
வேண்டும்
என்று
பிரதமருக்கு
கட்டளையிடவில்லை.
அதன்
பிறகு
பா.ஜ.க. போன்ற
எதிர்க்கட்சிகள்
மற்றும்
பொதுமக்களின்
கடும்
எதிர்ப்பினால்
அரசு
அதை
9 ஆக
உயர்த்தியது.
அப்போதும்
ராகுல்
அதை
12 ஆக
உயர்த்த
வேண்டும்
என்று
ஒரு
பேச்சிற்கு
கூட
கூறவில்லை.
ஆனால்,
எதிர்க்கட்சியினரும்
பொதுமக்களும்
அதை
12 ஆக
உயர்த்த
தொடர்ந்து
வலியுறுத்தி
வந்தனர்.
ஆனால்,
ஐ.மு.கூ. அரசு
விடாப்பிடியாக
மறுத்து
வந்தது.
ராகுலும்
மௌன
குருவாகவே
காட்சியளித்தார்.
2012 செப்டம்பரிலிருந்து
2014 ஜனவ்ர்
15 வரை
அதாவது
சுமார்
16 மாத
காலமாக
9 சிலிண்டர்கள்
ஒரு
குடும்பத்திற்கு
போதாது
12 வேண்டும்
என்ற
ஞானோதயம்
ராகுலுக்கு
உண்டாகவேயில்லை.
இப்போதுதான்
அந்த
ஞானோதயம்
வந்திருக்கிறது.
காரணம்
இன்னும்
3 மாதத்தில்
மக்களவைத்
தேர்தல்
வரவிருக்கிறது.
எனவே, 9 சிலிண்டரை 12 ஆக உயர்த்த
ராகுல்
காட்டளையிட்டிருப்பது
மக்கள்
நலனின்பால்
கொண்ட
அக்கறையினால்
அல்ல..
தேர்தலில்
மக்களை
ஏமாற்றி
ஓட்டு
வாங்கத்தான்
என்பதை
நம்மால்
தெளிவாக
புரிந்து
கொள்ள
முடிகிறது.
இதுமட்டுமல்ல, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல சலுகைகளையும் இலவசங்களையும்
' ராகுல்
உத்தரவிட்டார்'
என்ற
பெயரில்
ஐ.மு.கூ. அரசு
வழங்கும்.
தாங்கள்
மூழ்கியிருக்கும்
ஊழல்,நிர்வாகத்
திறமையின்மை,
செயல்படாத்
தன்மை
போன்ற
பெரும்
சேற்றுக்
குழியை
மக்களிடமிருந்து
மறைக்க
என்னென்ன
ஏமாற்று
நாடகங்களையும்
மாய்மாலங்களையும்
நடத்த
முடியுமோ
அத்தனையும்
இந்த
3 மாதத்தில்
நடத்தும்.
ஆனால், இதற்கெல்லாம் ம்க்கள்
ஏமாறப்போவதில்லை;
அவர்கள்
விழிப்புடன்
இருக்கிறார்கள்;
உறுதியுடன்
இருக்கிறார்கள்;
மாற்றம்
கொண்டு
வருவோம்
என்ற
முடிவில் மாறாதிருக்கிறார்கள்..