சோனியா காந்தியை 'மக்களின்
பசிப்பிணி
தீர்த்த
மணிமேகலை'
என்று
பாராட்டியிருக்கிறார்
கருணாநிதி.
காங்கிரஸ் கட்சியினர் கூட அவரை
இப்படிப்
பாராட்டிப்
பேசியதில்லை.அந்த
அளவிற்கு
கருணாநிதி
சோனியாவின்
தாள்
பணிந்திருக்கிறார்;
சோனியாவின்
அருள்
பெற்று
கருணாநிதி
நலமாயிருக்கட்டும்.
மத்திய அரசு புதிதாகக் கொண்டு
வந்திருக்கும்
உணவுப்
பாதுகாப்புத்
திட்டத்தின்படி,
வறுமைக்
கோட்டின்
கீழ்
வாழும்
மக்களுக்கு
கிலோ
ரூ3
விலையில்
அரிசி
வழங்கப்படும்.
ஆனால்,
தமிழகத்தில்
இப்போது
அனைத்து
மக்களுக்கும்
எவ்வித
விலையுமில்லாமல்
மாதந்தோறும்
20 கிலோ
அரிசி
இலவசமாக
வழங்கப்படுகிறது;
அதுமட்டுமல்லாமல்,
'அம்மா
உணவகம்'
திட்டத்தின்
மூலம்
தரமான
காலைச்
சிற்றுண்டியும்
மதிய
உணவும்
மிக
மிக
மலிவான
விலையில்
வழங்கப்படுகிறது.
மத்திய
அரசின்
உணவுப்
பாதுகாப்புச்
சட்டத்தை
விட
தமிழக
அரசின்
இந்த
திட்டங்களே
சிறப்பானது
என்பதை
கட்சி
பேதம்
கடந்து
அனைவருமே
ஏற்றுக்
கொள்வார்கள்.
இது ஒருபுறமிருக்கட்டும்.
கருணாநிதி திடீரென்று இப்படி
உணவுப்
பாதுகாப்புச்
சட்டத்தை
சாக்காக
வைத்து,
சோனியா
தலையில்
டன்
கணக்கில்
ஐஸ்
வைத்து
அவர்
தாள்
பணிய
நினைப்பது
ஏன்
..?
சொக்கத்
தங்கம்
.. சொக்கத்
தங்கம்
என்று
சோனியாவைப்
புகழ்ந்து
அதன்
மூலம்
மத்திய
அரசில்
பணம்
கொழிக்கும்
இலாக்காக்களை
தன்
கட்சிக்கு
வாங்கிக்
கொண்டு,
2ஜி
ஊழலில்
தன்
மகள்
கனிமொழி
மூலமும்
பேரன்
தயாநிதி
மாறன்
மூலமும்
ஆயிரக்
கணக்கான
கோடிகள்
பலன்
பெற்றவர்
கருணாநிதி.
இன்று
பசிப்பிணி
தீர்த்த
மணிமேகலை
என்று
அவரைப்
புகழ்ந்து
அதன்
மூலம்
தயாநிதியையும்
கனிமொழியையும்
2ஜி
ஊழல்
வழக்குகளிலிருந்து
விடுவிக்க
நினைக்கிறார்.
விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு ராகுல்
வாழ்த்துச்
சொன்னது
கருணாநிதிக்கு
அச்சத்தை
ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ்
தே.மு.தி.க.வுடன்
கூட்டணி
வைத்துக்
கொண்டால்,
2ஜி
ஊழலில்
நியாயமான
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுவிடும்
என்ற
அச்ச
உணர்வின்
காரணமாகவும்
மீண்டும்
சோனியாவுடன்
கூட்டணிக்கு
இல்லை..
இல்லை..
சோனியாவின்
தாள்
பணியத்
தயாராகி
விட்டார்
கருணாநிதி.
இதுதான்
சோனியா
காந்தி
மணிமேகலை
அவதாரமானதின்
பின்னணி
ஆகும்.
அவர் சோனியாவை புகழ வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தாமல்
மணிமேகலை
என்ற
பெயரைத்
தேர்ந்தெடுத்ததற்கும்
ஒரு
பின்னணி
காரணமிருக்கிறது.
தமிழிலக்கியத்தில்
வரும் மணிமேகலை தனக்குக் கிடைத்த அள்ள அள்ளக் குறையாமல்
உணவு வழங்கும் அட்சய பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு
உணவளித்தவர்.
கருணாநிதிக்கு
என்று
ஒரு
சிறப்பியல்பு
உண்டு.
அவருக்கு
எல்லாமே
அவரது
குடும்பம்தான்.
அவரது
குடும்பத்தினரின்
வளர்ச்சியைத்தான்
மக்களின்
வளர்ச்சியாக
நினைப்பார்;
அவரது
குடும்பத்தினரின்
மகிழ்ச்சியைத்தான்
மக்களின்
மகிழ்ச்சியாகக்
கருதுவார்.
அந்த
அடிப்படையில்தான்
அவர்
சோனியாவை
' மக்களின்
பசிப்பிணி
தீர்த்த
மணிமேகலை'
என்று
பாராட்டியிருக்கிறார்.
சோனியா காந்தி கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர்களின்
பதவிப்
பிணிகளைத்
தீர்த்தவர்;
அவர்களது
பணப்பிணிகளைத்
தீர்த்தவர்.
அதனால்தான் அவரை மணிமேகலை என்று
பாராட்டியிருக்கிறார்
கருணாநிதி.
என்ன
இருந்தாலும்
தமிழிலக்கியங்களைப்
படித்தவர்
அல்லவா ....