திடீரென்று தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கிற்கான குரல்கள் ஒங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
இந்தியாவில் குஜராத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு அமுலில் இல்லை. ஆனால், எல்லா மாநிலங்களிலும் மக்கள் மது குடித்து சந்தோஷமாயிருப்பது போலவும் தமிழகத்தில் மட்டும் சீரழிந்து போவது போலவும் அனைத்து கட்சிகளும் தமிழ் நாட்டில் மட்டும் மதுவிலக்கு கோருகின்றன. கர்நாடகத்திலும் கேரளாவிலும் மதுக்கடைகளைத் திறந்து வைத்திருப்பது காங்கிரஸ் கட்சியின் அரசு; அதே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மதுவிலக்கு கோருகிறது. பாண்டிச்சேரியில் மதுவிலக்கு கேட்காத கட்சிகள் தமிழகத்தில் கேட்கின்றன.
இது விசித்திரமாயிருக்கிறது.
மது குடிக்கக் கூடாது; மது மனிதனை மிருகமாக்குகிறது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை;
ஆனால், அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டால் மக்கள் யாரும் மது அருந்தமாட்டார்கள் என்றும் எல்லாம் மாறிவிடும் என்று யாரேனும் நினைப்பார்களேயானில் அதைவிட பெரிய ஏமாளித்தனம் ஏதும் இருக்க முடியாது.
மாறிவரும் சமுதாயச் சூழ்நிலையில், முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. மக்களிடையே இருக்கும் குடிப்பழக்கத்தைப் போக்காமல் மதுக்கடைகளை மட்டும் மூடுவது எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். இப்போதிருக்கும் நிலையை விட மோசமான எதிர் விளைவுகளை அது சமுதாயத்தில் உண்டாக்கும். இது அனுமானமல்ல; கற்பனையுமல்ல; கடந்த காலங்களில் பலமுறை நாம் கண்ணெதிரிலேயே கண்டது.
எனவே, மதுக்கடைகளை முற்றிலுமாக மூடுவதை விட சில கட்டுப்பாடுகளை உருவாக்கலாம். 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது;25 வயதிற்குட்பட்டவர்கள் மது போதையில் இருந்தால் அதிகபட்ச அபராதம் உட்பட அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது; பள்ளிகள், கோயில்கள், மார்க்கெட் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மதுக்கடைகளைத் திறக்காமலிருத்தல் போன்ற கட்டுப்பாடுகளை உண்டாக்கலாம்.
முழுமையான மதுவிலக்கு என்பது உணர்ச்சி வசப்பட்டு வைக்கப்படும் கோரிக்கை; இதனால் எந்தப் பலனும் கிடைக்காது; இதைவிட மோசமான எதிர்விளைவுகளே உண்டாகும்.
நாங்கள் ஆட்சிக்கு வ்ந்தால், மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று கூறுபவர்கள் எல்லாம் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒருயுக்தியாகக் கருதி கூறுகிறார்களே தவிர வேறொன்றுமில்லை; ரூபாய்க்கு 3 படி அரிசி கதை போலத்தான் இந்த வாக்குறுதியும் முடியும். இதன் பேரில் பதவிக்கு வந்துவிட்டால், அடுத்த சில மாதங்களிலேயே கள்ளச்சாராயம் அதிகரித்து விட்டது.. மக்கள் விஷச் சாராயத்தையும் கண்டதையும் குடித்து இறக்கிறார்கள்..உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.. அண்டை மாநிலங்களிலிருந்து அதிக அளவில் மதுபானங்கள் கடத்தல் நடைபெறுகின்றன.. என்ற காரணங்களைக் கூறி மீண்டும் மதுக்கடைகளைத் திறப்பார்கள்; இதுதான் பலமுறை நடந்திருக்கிறது; மீண்டும் இதுதான் நடக்கும்.
மதுப்பழக்கம் முற்றிலும் இல்லாத சமுதாயம் உலகில் எங்குமே இருப்பதாகத் தெரியவில்லை; இந்த நவீன யுகத்தில் சிறுவர்களும் இளம்பெண்களும் கூட மதுவிற்கு அடிமையாகின்றனர். அதுதான் பிரச்னைக்குரிய விஷயம் . மது குடிக்கும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை தேவை; அதற்குத்தான் கட்டுப்பாடுகள் தேவை. மது குடிப்போர் எண்ணிக்கை குறைய குறைய , மதுக்கடைகள் தன்னாலேயே படிப்படியாக மூடப்பட்டுவிடும்.
இந்தியாவில் குஜராத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு அமுலில் இல்லை. ஆனால், எல்லா மாநிலங்களிலும் மக்கள் மது குடித்து சந்தோஷமாயிருப்பது போலவும் தமிழகத்தில் மட்டும் சீரழிந்து போவது போலவும் அனைத்து கட்சிகளும் தமிழ் நாட்டில் மட்டும் மதுவிலக்கு கோருகின்றன. கர்நாடகத்திலும் கேரளாவிலும் மதுக்கடைகளைத் திறந்து வைத்திருப்பது காங்கிரஸ் கட்சியின் அரசு; அதே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மதுவிலக்கு கோருகிறது. பாண்டிச்சேரியில் மதுவிலக்கு கேட்காத கட்சிகள் தமிழகத்தில் கேட்கின்றன.
இது விசித்திரமாயிருக்கிறது.
மது குடிக்கக் கூடாது; மது மனிதனை மிருகமாக்குகிறது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை;
ஆனால், அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டால் மக்கள் யாரும் மது அருந்தமாட்டார்கள் என்றும் எல்லாம் மாறிவிடும் என்று யாரேனும் நினைப்பார்களேயானில் அதைவிட பெரிய ஏமாளித்தனம் ஏதும் இருக்க முடியாது.
மாறிவரும் சமுதாயச் சூழ்நிலையில், முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. மக்களிடையே இருக்கும் குடிப்பழக்கத்தைப் போக்காமல் மதுக்கடைகளை மட்டும் மூடுவது எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். இப்போதிருக்கும் நிலையை விட மோசமான எதிர் விளைவுகளை அது சமுதாயத்தில் உண்டாக்கும். இது அனுமானமல்ல; கற்பனையுமல்ல; கடந்த காலங்களில் பலமுறை நாம் கண்ணெதிரிலேயே கண்டது.
எனவே, மதுக்கடைகளை முற்றிலுமாக மூடுவதை விட சில கட்டுப்பாடுகளை உருவாக்கலாம். 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது;25 வயதிற்குட்பட்டவர்கள் மது போதையில் இருந்தால் அதிகபட்ச அபராதம் உட்பட அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது; பள்ளிகள், கோயில்கள், மார்க்கெட் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மதுக்கடைகளைத் திறக்காமலிருத்தல் போன்ற கட்டுப்பாடுகளை உண்டாக்கலாம்.
முழுமையான மதுவிலக்கு என்பது உணர்ச்சி வசப்பட்டு வைக்கப்படும் கோரிக்கை; இதனால் எந்தப் பலனும் கிடைக்காது; இதைவிட மோசமான எதிர்விளைவுகளே உண்டாகும்.
நாங்கள் ஆட்சிக்கு வ்ந்தால், மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று கூறுபவர்கள் எல்லாம் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒருயுக்தியாகக் கருதி கூறுகிறார்களே தவிர வேறொன்றுமில்லை; ரூபாய்க்கு 3 படி அரிசி கதை போலத்தான் இந்த வாக்குறுதியும் முடியும். இதன் பேரில் பதவிக்கு வந்துவிட்டால், அடுத்த சில மாதங்களிலேயே கள்ளச்சாராயம் அதிகரித்து விட்டது.. மக்கள் விஷச் சாராயத்தையும் கண்டதையும் குடித்து இறக்கிறார்கள்..உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.. அண்டை மாநிலங்களிலிருந்து அதிக அளவில் மதுபானங்கள் கடத்தல் நடைபெறுகின்றன.. என்ற காரணங்களைக் கூறி மீண்டும் மதுக்கடைகளைத் திறப்பார்கள்; இதுதான் பலமுறை நடந்திருக்கிறது; மீண்டும் இதுதான் நடக்கும்.
மதுப்பழக்கம் முற்றிலும் இல்லாத சமுதாயம் உலகில் எங்குமே இருப்பதாகத் தெரியவில்லை; இந்த நவீன யுகத்தில் சிறுவர்களும் இளம்பெண்களும் கூட மதுவிற்கு அடிமையாகின்றனர். அதுதான் பிரச்னைக்குரிய விஷயம் . மது குடிக்கும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை தேவை; அதற்குத்தான் கட்டுப்பாடுகள் தேவை. மது குடிப்போர் எண்ணிக்கை குறைய குறைய , மதுக்கடைகள் தன்னாலேயே படிப்படியாக மூடப்பட்டுவிடும்.