தலித்துகள் ஹிந்துக்கள்.
பிற மக்களைப் போலவே அவர்களும் ஹிந்து மதத்தின் ஒரு அங்கம்; தலித்துகளை விட ஹிந்து மதத்தின்
பிற ஜாதி மக்கள் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்லர்; பிற ஜாதி மக்களை விட தலித்துகள்
எவ்வகையிலும் தாழ்ந்தவரும் அல்லர்.
தலித்துகளை தீண்டத்தகாதவர்களாகக்
கருதுபவர்கள் ஹிந்து மதத்திற்கு மட்டுமல்ல..தேசத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கிறார்கள்
என்பது உறுதியான விஷயம். நாட்டின் கிராமங்களில் சில பகுதிகளில் தலித்துகள் பொதுக் கிணறுகளில்
தண்ணீர் எடுப்பதற்கும், பிற மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கும் , பள்ளிகளில் தலித் மாணவர்கள்
பிற மாணவர்களோடு இணைந்து கல்வி கற்பதற்கும் இன்னும் பல வகைகளிலும் தலித்துகள் மீது
தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. ஹிந்து சமுதாயத்தின் ஒரு பிரிவு மக்கள் எதற்காக இத்தகைய
அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்..?இந்நிலை மாற வேண்டும்; இத்தகைய தீண்டாமைக்கு
காரணமானவர்கள் மாறியாக வேண்டும்; அல்லது மாற்றப்பட்டாக வேண்டும். கடவுள் வழிபாட்டிலும்
தலித்துகள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்; கோயிலில் பிற மக்களோடு இணைந்து கடவுளை தரிசிக்கும்
உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுவது மிகவும் தவறான விஷயம். ஹிந்து மக்களில் ஒரு பிரிவினரை
இப்படி தீண்டத் தகாதவர்கள் என்ற நிலைக்குத் தள்ளுவதன் மூலம், அவர்களுக்கு அத்தகைய நிலையை
உண்டாக்குபவர்கள் தங்களை மனிதர்கள் என்ற நிலையிலிருந்தே
தங்களை தரம் தாழ்த்திக் கொள்கின்றனர்.
தீண்டாமை என்பது ஹிந்து மதம் உருவாக்கியதல்ல; தலித்துகளை புறக்கணிக்கச் சொல்லி வேதங்கள் உட்பட எந்த ஹிந்து மத நூலும் வலியுறுத்தவில்லை. ஜாதியின் பெயரில் வழிதவறிச் செல்லும் சிலராலேயே இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. மத மாற்றம் இதற்கு தீர்வல்ல. ஹிந்து மதம் தலித்துகளுக்கும் சொந்தமானது.
ஹிந்துக் கடவுள்களை வழிபட தலித்துகளுக்கு உரிமையில்லை என்று அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றால், அவர்கள் பிற மதத்திற்கு மாற ஜாதியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பேசுபவர்கள் வலியுறுத்துகிறார்களா..? பணம் கொடுத்தும் ஏமாற்றியும், இன்னும் பல முறைகேடான வழிகளிலும் தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிற மதத்தினர்கள் இரவு பகலாக பாடுபட்டு வருகையில், தம் மதத்தைச் சார்ந்தவர்களையே, நாம் வணங்கும்கடவுளையே பக்தியுடன் கும்பிடுபவர்களையே பிற மதத்திற்கு மாறத் தூண்டி, ஹிந்து மதத்தை
பலவீனப்படுத்த முயலும், உயர்ந்த ஜாதி என்று கற்பனையில் தங்களைத் தாங்களே உயர்வாக எண்ணிக் கொண்டு மனிதத் தன்மையற்ற முறையில் நடக்க முற்படும் ஹிந்துக்களை என்ன பெயரிட்டு அழைப்பது..?
மதமாற்றத்திற்கு தீண்டாமை ஒரு பிரதான காரணமாயிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.தலித்துகளை ஒதுக்கி வைத்து ஹிந்து மதம் நலிந்து போக ஹிந்துக்களே காரணமாயிருக்கலாமா..?ஹிந்துக்களின் எண்ணிக்கையை குறைத்து ஹிந்து மதம் பலவீனமடையவே இது வழி செய்யும். ஹிந்து மதம் பலவீனப்பட்டு பிற மத ஆதிக்கம் ஏற்படுமேயாயின் தம்மை உயர்ந்த ஜாதி (?) என்று எண்ணிக் கொள்ளும் ஹிந்துக்கள் வழிபட கோயில்களே இல்லாத நிலை ஏற்படுவதோடு அவர்கள் ஹிந்துக்களாக வழவே முடியாத நிலையும் ஏற்படும். ( ஹிந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்து போனதால் நாட்டின் சில பகுதிகளில் இது போன்ற நிலை ஏற்பட்டிருப்பது அனைவரும் அறிந்த உண்மை.) ஒன்றுபட்ட சமுதாயமே நிலைத்து நிற்க முடியும்.
ஆன்மீகம் மற்றும் சமுதாயத்தின் பிற துறைகளிலும் தலித்துகளுக்கு எதிராக சிலர் கடைப்பிடிக்கும் தீண்டாமை, வெறுப்பு மற்றும் தீண்டாமை போன்ற இவற்றை தங்கள் கருவியாகப் பயன்படுத்தியே ஹிந்து சமுதாயத்தையும் நாட்டையும் வீழ்த்த பல் தீய சக்திகள் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இந்த தீய சக்திகள் வீழ்த்தப்படுவதில்தான் நமது மட்டுமல்ல, நம் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வும் அடங்கியிருக்கின்றது. அனைத்து மக்களும் கடவுளின் படைப்பு. கடவுள் தன் படைப்பில் உயர்வு தாழ்வு பேதம் படைப்பதில்லை. அனைவரையும் சமமாகத்தான் படைக்கிறார்.
போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் எந்த விஷயமானாலும் 'தலித் மற்றும் சிறுபான்மையினர்கள் ஒற்றுமை வேண்டும்' என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் தலித் மக்களை ஹிந்து சமுதாயத்திலிருந்து பிரித்து பலவீனப்படுத்த நினைக்கிறார்கள். இவர்களது முயற்சி வெற்றி பெற அனுமதித்துவிடக் கூடாது.தீண்டாமை பேசி இத்தகைய தீய சக்திகளின் கரங்களை பலப்படுத்த ஹிந்துக்களே காரணமாய் இருந்துவிடக் கூடாது.
தலித்துகள் ஹிந்துக்கள்; அவர்கள் ஹிந்துக்களாகவே என்றும் வாழ வேண்டும். அவர்கள் தீண்டத் தகாதவர்கள் அல்லர்; கோயில்களில் அனைவரும் இணைந்து திருவிழாக்கள் எடுப்போம்; கிராமங்களில் நகரங்களைப் போலவே அனைவரும் இணைந்திருப்போம். ஹிந்து சமுதாயத்தைப் பலப்படுத்தி நாட்டை முன்னேற்றுவோம்.