ராகுல் காந்தி இங்கிலாந்தில் பேக் ஆப்ஸ்( Back
ops Limited )என்ற நிறுவனத்தை துவக்கி அந்நிறுவனத்தின் தலைவராகவும் செயலாளராகவும் இருந்தபோது, அந்நிறுவனம் தாக்கல் செய்த ஆண்டு கணக்கு அறிக்கைகளில் ( Annual
return statemaents ) ராகுல் காந்தி இங்கிலாந்து பிரஜை என குறிப்பிடப்பட்டிருக்கிறது; ஒரு முறை அல்ல..2005,2006 மற்றும் 2009 என 3 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளில் ராகுல் இங்கிலாந்து நாட்டு பிரஜை என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கணக்கு அறிக்கைகளை சரிபார்த்து கையெழுத்திட்டிருப்பவர் ராகுல் காந்திதான். இதற்கு ஆதாரமாக ஆவணங்களும் இருக்கின்றன. இந்த உண்மைகளை சுப்பிரமணிய சாமி அம்பலப்படுத்தியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியும் இதை மறுக்கவில்லை; ஆனால், அது டைப் ( Type ) அடித்தவரின் தவறால் ஏற்பட்டது என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் கூடவா தவறாக டைப் செய்வார்கள்..? அதுவும் 3 வருடங்களாக..? நம்ப முடிகிறதா காங்கிரஸ் கட்சியின் விளக்கத்தை..? 2004 ல் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி தான் தாக்கல் செய்த சொத்துக் கணக்குகளில் தான் இங்கிலாதில் வசிப்பதாக குறிப்பிட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால், ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. மாறாக, பிரதமரைப் பார்த்து தைரியமிருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டிருக்கிறார். இவ்விஷயத்தை மக்கள் முன் அம்பலப்படுத்தியவர் சுப்பிரமணியகாமி அவர்கள். ஆனால், ராகுல் மோடிக்கு கன்டனம் தெரிவிக்கிறார். சுப்பிரமணிய சாமியின் குற்றக்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றால் விளக்கங்களுடன் அவருக்கு ராகுல் பதிலளிக்க வேண்டும். அல்லது அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்க வேண்டும். இவற்றில் எதையும் செய்யாமல்,மோடி மீது குற்றம் சாட்ட முற்படுவதும் , என்னைக் கைது செய்து பார்.. என்னைக் கைது செய்து பார்.. என்று துடிப்பதும் சரியான விஷயமாகத் தெரியவில்லை. 'உண்மையை மறைக்க உரக்க சத்தம் போடு' என்பார்கள். ராகுலின் செயல் இப்படித்தான் இருக்கிறது.
யார் என்ன சொன்னாலும் ...என்ன செய்தாலும் மோடி மீது பழி போடுவதையும் குற்றம் சாட்டுவதையும் காங்கிரஸ் உட்பட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றன. பீஹார் தேர்தலுக்கு முன்பாக பசு வதைப் பிரச்னை, இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பலர் கூறிய கருத்துக்களுக்கு மோடியை குற்றவாளியாகச் சித்தரித்தார்கள் இப்போதும் அதே நிலையை இக்கட்சிகள் கடைப்பிடிக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி வீழ்த்தப்பட்டதற்கு மோடியே பிரதான காரணம் என்பதனால் மோடியை பலவீனப்படுத்தி விட்டால் மீண்டும் அதிகாரம் தாங்கள் கைவசமாகிவிடும் என்று இக்கட்சிகள் கருதுகின்றன. அதனால்தான் 'எது நடந்தாலும்.. யார் என்ன சொன்னாலும் மோடியைத் தாக்கு ' என்ற வியூகத்தை இக்கட்சிகள் கடைப்பிடிக்கின்றன. இவ்வியூகம் பீஹார் தேர்தலில் பெரும் வெற்றியைத் தேடித் தந்ததைக் கண்ட இக்கட்சிகள் இதே அணுகுமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்க எண்ணுகின்றன.
ஆனால்,
ஏமாற்று வேலைகளாலும் பொய்களாலும் எப்போதும் உண்மையை மறைக்க முடியாது.