Thursday 30 March 2017

பயிரும் களைகளும்.

தமிழகத்தில் நெடுவாசல் உட்பட நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுவதால் விவசாயமோ நிலத்தடி நீரோ பாதிக்கப்படாது என்பதை அரசு மட்டுமல்ல.. பல்வேறு நிபுணர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். தமிழகம் தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் இதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. 
      
ஆனால், தமிழகத்தில் பிரிவினைவாதிகளும் தேசவிரோத மற்றும் பிற தீய சக்திகளும் அரசியல் இலாபம் கருதி சில எதிர்க்கட்சியினரும் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்கள் மத்தியில் தவறான சிந்தனைகளை விதைத்து இத்திட்டத்திற்கு எதிராகப் போராட அவர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்திட்டம் நிறைவேறிவிடாமலிருக்க பல்வேறு பொய்ப் பிராச்சாரங்களையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் போன்ற பொருட்கள் நாட்டின் பெருவளங்களாகும். இவை மக்களுக்கு உரிய வளங்களாகும். மக்களுக்கு தீங்கு விளைவிக்காத மிகவும் பாதுகாப்பான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே இவை பூமியிலிருந்து வெளியில் கொண்டுவரப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் குறிப்பிட்ட அளவிலான பகுதி தவிர பிற இடங்களில் எப்போதும் போல விவசாயம் செய்ய முடியும்...நிலத்தடி நீரும் இதனால் சிறிதும் பாதிக்கப்படாது என்பதை அரசும் நிபுணர்களும் பல வகைகளிலும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இத்திட்டம் நிறைவேற்றப்படுவதனால் அப்பகுதி மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு கிராமப் பொருளாதாரமும் முன்னேற வழி ஏற்படும். தவறான வழிகாட்டுதலையும் வீண் கட்டுக்கதைகளையும் நம்பி பீதியடைவதை தவிர்த்து மக்கள் உண்மையை உணர வேண்டும்.

இளைஞர்கள் மாணவர்கள் என்ற பெயரில் ( இவர்கள் குறிப்பிட்ட பிரிவினைவாத தேசவிரோத இயக்கங்களைச் சார்ந்த மற்றும் எதிரணியிலிருக்கும் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களே ) எடுத்ததெற்கெல்லாம் போராட்டம் என்ற பெயரில் தமிழர்களின் முன்னேற்றம் தமிழகத்தின் வளர்ச்சி போன்றவற்றிற்கு தடைகளை உருவாக்க முற்படுகிறனர்.

பாதுகாப்புடனும் மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும் திட்டம் நிறைவேற்றப்படவும் தங்கள் நிலங்களுக்கு போதுமான ஈட்டுத்தொகை பெறுவதிலும் மற்ற பிற வசதிகளையும் கேட்டுப் பெறுவதிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். பொய்யான ஏமாற்றுப் பிரச்சாரங்களை நம்பி  நல்ல திட்டங்களுக்கு தடைவித்தித்து மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறு செய்ய அனுமதிக்கக் கூடாது.

இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடு; விவசாய பூமி; ஆனால், விவசாயம் தவிர்த்த பிற எந்தவிதமான முன்னேற்ற , வளர்ச்சித் திட்டங்களையும் அனுமதிக்கக்கூடாது என்ற நிலைப்பாடு கிராம முன்னேற்றத்திற்கு உதவாது.


மக்களை இத்தகைய தவறான வழியில் வழிநடத்த முற்படுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்கள் செழித்து வளர அதனுள் ஊடுருவியிருக்கும் களைகள் அகற்றப்படுவதும், மக்கள் முன்னேற சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் தீய சக்திகள் அகற்றப்படுவதும் இன்றியமையாதவை ஆகும்.

Friday 3 March 2017

வளர்ச்சி.. முன்னேற்றம் ...மக்களுக்கு பிரதானம்


தமிழ்நாட்டின் சாபக்கேடோ என்னவோ...எந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படுமேயானாலும் உடனடியாக சில மக்கள் விரோத தேச விரோத சக்திகள் அதை எதிர்க்க முற்படுவதும், சிறிது கூட நன்மை தீமைகளை ஆராய்ந்தறியாமல் பாமர மக்களும் விஷய ஞானம் இல்லாதவர்களும் பொய்ப்பிரச்சாரங்களை நம்பி அந்த எதிர்ப்புக் கூட்டத்தோடு கைகோர்த்துக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகிவிட்டிருக்கிறது.

ஒரு நாடு சுயச்சார்புத் தன்மையுடன் பல முனைகளிலும் பல துறைகளிலும் வளர்ச்சி காணும்போதுதான் முன்னேறும்; நாடு முன்னேறும்போது மக்களின் வாழ்க்கையும் வளம்பெறும். 

இப்போது விஷயத்திற்கு வருவோம். 
எரிவாயு, கச்சா எண்ணெய் போன்ற இயற்கை வளங்கள் ஒரு நாட்டில் எந்த அளவிற்கு உற்பத்தி செய்ய முடிகிறதோ அந்த அளவிற்கு அந்நாடு செல்வச்செழிப்புள்ளதாகவும் வலிமை மிக்கதாகவும் மாறும். பூமிக்கடியில் எல்லா இடங்களிலும் இவை கிடைப்பதில்லை. குறிப்பிட்ட சில இடங்களில்தான் கிடைக்கின்றன. இவ்விடத்தில் இவ்வளங்கள் கிடைக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்படும்போது, அரசு, தனக்குச் சொந்தமான ONGC போன்ற நிறுவனங்களின் மூலமோ தனியார் நிறுவனங்களின் மூலமோ அவ்விடத்தில் மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பாதுகாப்பான தொழில்நுட்பங்களின் உதவியுடன்  உற்பத்தியை ஆரம்பிக்கிறது. 

இப்படித்தான் தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் எண்ணெய் வளங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றனஉற்பத்தியும் நடைபெற்றுவருகிறதுஇத்தகைய இடங்களில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை

விவசாய நிலங்களிளின் பூமிக்கு அடியே இத்தகைய வளங்கள் கிடைக்கும் என்று கண்டறியப்படுமேயானால்நிலத்தின் உரிமையாளருக்கு தகுந்த நஷ்ட ஈட்டை வருட குத்தகையாகவோ மொத்தமாகவோ அளித்து அரசு நிலத்தை எடுத்துக் கொள்கிறதுவிவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அவர்களுக்கு கூடுதலான வருமானமே இதன் மூலம் கிடைக்கும்இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்அப்பகுதியில் பெரும் வளர்ச்சியும் உண்டாகும்இவை வெறும் கற்பனையல்ல..பல பகுதிகளிலும் நாம் கண்டிருக்கும் உண்மைகள்தான்

மற்றபடி நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.. விவசாயம் அழிந்துவிடும் என்பதெல்லாம் வெற்றுக் கூச்சலே தவிர வேறொன்றுமில்லைஇந்த முறையில்தான் எண்ணற்ற அணைகள்நிலக்கரிச் சுரங்கங்கள்,  தொழிற்சாலைகள்மின் நிலையங்கள்சாலைகள்,ரயில் பாதைகள் மட்டுமல்ல.. எண்ணெய் எரிவாயு உற்பத்தி செய்யும் மையங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றனமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தக்க பாதுகாப்புடனேயே இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனஎனவே மக்கள் அஞ்சத் தேவையில்லைஇந்தியாவில் மட்டுமல்ல.. உலகம் முழுவதிலுமேயே மக்களுக்கு பயன்படும் வளர்ச்சித் திட்டங்கள் இப்படித்தான் நிறைவேற்றப்படுகின்றன
ஆனால்இத்தகைய திட்டங்கள் நிறைவேற்றப்படும்போதுமக்களின் பாதுகாப்புமுன்னேற்றம்பொருளாதார வளர்ச்சிமாற்று இடம்வேலைவாய்ப்புஊழல், முறைகேடின்மை போன்றவற்றை அரசுகள் உத்தரவாதப்படுத்த வேண்டும்மக்களும் அதற்காகப் போராடலாம்

அதை விடுத்துஎந்த திட்டமானாலும்சுயநலப்போக்குடைய வளர்ச்சியை விரும்பாத சிலரது வழிகாட்டுதலை ஏற்றுகண்மூடித்தனமாக அவற்றை எதிர்க்கத் துவங்கினால்உண்மைகளை அறிந்து கொள்ளாமல் உணர்ச்சிபூர்வமான கோஷங்களுக்கு மயங்கி வளர்ச்சித் திட்டங்களை தடுத்து நிறுத்தினால்தமிழர்களின் முன்னேற்றம் மட்டுமல்ல.. தமிழகமும் பின்தங்கிப் போகும்.

எனவே..இத்தகைய தீய சக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனுமிருந்து அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.