Tuesday 21 September 2021

இந்திய சரித்திரத்தில் ஒரு பொற்காலம்.

 


இந்திய சரித்திரத்தில் ஒரு பொற்காலம்.


பிரதமர் மோடி அவர்கள் பொதுவாழ்வில் 20 ஆண்டுகள் ( குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள், நாட்டின் பிரதமராக 7 ஆண்டுகள் ) நிறைவு பெற்றதை ஒட்டி, தினமலர் 19/9/2021 அன்று வெளியிட்ட 4 பக்க சிறப்பு செய்திகள் மிகவும் அருமையாக இருந்தன. தினமலருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மோடியின் 7 ஆண்டுகள் பிரதமர் ஆட்சியின் சாதனைகள் எண்ணற்றவை. அதில் 2 விஷயங்கள் மிக முக்கியமானவை. மோடிக்கு முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை  பெரும் பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இப்பயங்கரவாதச் சம்பவங்களுக்கு அப்போதைய ஐமுகூ அரசு வெறும் கண்டனங்களை மட்டுமே பதிலடியாக கொடுத்து வந்தது.

அதே போல, ஒவ்வொரு 6 மாதத்திற்கும் மத்திய ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட பெரும் ஊழல்கள் வெளிப்பட்டுவந்தன. பல்லாயிரக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் இந்த ஊழல்களால் ஆட்சியாளர்களின் பாக்கெட்டுகளை சென்றடைந்தது.

மோடி பிரதமரானதும் இவை இரண்டுக்கும் முடிவுகட்டப்பட்டது. நாட்டில் மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எல்லைப் பகுதிகளில் இராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கும் முன்பு போல கன்டன அறிக்கைகளோடு நின்றுவிடாமல் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது.. பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு, பயங்கரவாதத்துக்கு துணைபோன பாகிஸ்தான் மீதும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டது. 

முதன்முறையாக வலிமை மிக்க ஒரு ஆட்சியின் கீழ் இந்தியா பாதுகாப்பாக இருப்பதை மக்கள் உணர்ந்தார்கள்.

அதேபோல அரசின் உயர்மட்டங்களில் ஊழல் என்பதே இல்லாத ஒரு நிலையை மோடி அரசு உண்டாக்கியிருக்கிறது.. பிரதமர் மீது மட்டுமல்ல...எந்த மத்திய அமைச்சர்கள் மீதும் கூட கடந்த 7 வருடங்களில் ஊழல் குற்றச்சாட்டே இல்லாத ஒரு அரசாக மோடி அரசு விளங்குகிறது. ஒவ்வொரு இந்தியரும் இந்த அரசை நினைத்து பெருமைப்பட வேண்டிய விஷயம் இது. இந்தியர் ஒவ்வொரும் வரியாக கொடுக்கிற ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களாக மாறுகிறது; ஏழைகளுக்கான உதவி நிதியாக மக்களுக்கே திரும்ப கிடைக்கிறது.

இது மட்டுமல்ல....

மோடி தலைமையிலான இந்த 7 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அரிய சாதனைகள் பலவும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

அரசியல் சட்ட 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது அங்கே தினசரி நிகழ்ச்சியாக விளங்கிய பயங்கரவாத சம்பவங்கள் ஒடுக்கப்பட்டு மக்கள் தாராளமாக நடமாடும் நிலை உண்டாகியிருக்கிறது.அம்மாநிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஹிந்து மக்கள் மீண்டும் அங்கே குடியேற முடிந்திருக்கிறது.  

நூற்றாண்டு காலங்களாக நீடித்து வந்த அயோத்தி இராமபிரான் கோயில் பிரச்னைக்கு ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் தீர்வு காணப்பட்டது. 2023 வாக்கில் இராமபிரான் ஆலயம் கம்பிரமாக அயோத்தியில் உயர்ந்து நிற்கும்.இவையிரண்டும் சாதாரண சாதனைகள் அல்ல; பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டியவைகள் ஆகும்.

இந்தியா ஒரு விவசாய நாடு; 75% க்கும் மேற்பட்ட மக்கள் விவசாயிகள் ; அத்தகைய விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யவும் உலகளாவிய அளவில் தங்கள் விளைபொருட்களை விற்கவும் புதிய விவசாய சட்டங்கள் மூலம் வகை செய்யப்பட்டிருக்கிறது இது ஒரு புரட்சிகரமான சட்டமாகும். இதன்முலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு பெருக வாய்ப்பு ஏற்படும்.

கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்,  கோடிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராமல் வங்கிகளை ஏமாற்றும் பெரும் பண முதலைகளிடமிருந்து பணத்தை மீட்க திவாலா சட்டமும் கொண்டுவரப்பட்டது.

முப்படையினர்களைப் பாதுகாக்க அவர்களுக்கு நவீன ஆயுதங்களும் கவச உடைகளும் வழங்கப்பட்டன. ஒய்வு பெற்ற பாதுகாப்பு படையினர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க One Rank .. One Pension திட்டம் நிறைவேற்றப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த காலம் மாறி வெளிநாடுகளுக்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

உலகின் இருண்ட காலமான கொரானா வைரஸ் தாக்குதல்  சிறந்த முறையில் சமாளிக்கப்பட்டது.   மக்கள் உயிரிழப்புகளும் வைரஸ் பாதிப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டு மீட்சிக்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.  விஞ்ஞானிகள் ,  மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும்   தூய்மைப் பணியாளர்கள் இவர்களது தன்னிகரில்லாத சேவைகள் துணையுடன் பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைகள் விளைவாக கொரானா  பெருமளவு முடிவுக்கு வந்துவிட்டது. கொரானா  தடுப்பூசிகள் சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது  தற்சயம் வரை சுமார் 80 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டிருக்கின்றன. .மற்ற நாடுகளுக்கும் விற்பனை மற்றும் இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன..  இந்திய அரசின் இந்த  சாதனை உலகையே வியந்து பார்க்க வைத்திருக்கிறது.

பிரதமரின் செயல்பாடுகளில் ஜாதி மத பேதங்கள் இல்லை; சமூக நீதியைப் பாதுகாக்க நலிந்தோர்க்கு தேவையான இட ஒதுக்கீட்டு சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஜாதி அடிப்படையில் மட்டுமல்லாது பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது..இஸ்லாமிய பெண்களின் துயர் துடைக்க முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இன்னும் எத்தனை எத்தனையோ சாதனைகள் ; எழுதிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொன்னால் , இந்திய அரசியல் வானில் அஸ்தனமில்லாத சூரியனாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரதமரின் நடவடிக்கைகளால் இருண்ட பகுதிகள் எல்லாம் வெளிச்சமாகின்றன..

 பிரதமரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

மோடி இன்னும் பல காலம் பிரதமராக நீடிக்க வேண்டும்.  

மோடிக்கு பக்க பலமாக இருந்து ஆதரவு தர வேண்டும்