1992-96 இடையே பீஹாரில் நிகழ்ந்த
மாட்டுத் தீவன
ஊழலில் முன்னாள்
முதல்வர் லாலு
பிரசாத் யாதவ்
குற்றவாளி என்று
சி.பி.ஐ. சிறப்பு
நீதி மன்றம்
அறிவித்திருக்கிறது. இவ்வழக்கில் லாலுவுக்கு
2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கப் போவது
உறுதி. சுமார்
38 கோடி ரூபாய்
முறைகேடாக கையாளப்பட்டதாகக்
கூறப்படும் இவ்வழக்கில் 17 ஆண்டுகளுக்குப்
பிறகு இன்று
தீர்ப்பு வந்திருக்கிறது.
சமீபத்திய உச்சநீதி மன்ற
உத்தரவின்படி லாலுவின் எம்.பி. பதவி
பறி போகும்.
அடுத்த 6 வருடங்களுக்கு
அவர் தேர்தலில்
போட்டியிடவும் முடியாது. வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு;
இப்படிப்பட்ட தீர்ப்புகள் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாய் அமையும். ஆனால்,
வழக்கு தொடுக்கப்பட்டு
17 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு
வந்திருக்கிறது; இதற்கு மேல் உயர்நீதிமன்றம்,உச்ச
நீதிமன்றம் என அப்பீல்கள் இருக்கின்றன; எனவே
இறுதித் தீர்ப்பு
வர 25 வருடங்கள்
வரை கூட
ஆகலாம். நீதி
வழங்குவதில் இத்தகைய நீண்ட கால
தாமதம் ஏற்படுவது சரியானதுதானா..?
இந்தியாவில் அரசியல்வாதிகளில் பலர் ஊழல்வாதிகளாகவும் பல்வேறு முறைகேடுகளில்
ஈடுபடுபவர்களாகவும் மக்களை ஏமாற்றுபவர்களாகவும்
இருப்பதால் அரசியல் என்றாலே ஒரு சாக்கடை
என்று வர்ணிக்கப்படுகிறது;
மக்களில் பலர்
அரசியல் என்றாலே
முகம் சுளிக்கின்றனர்.இப்படிப்பட்ட மோசடி
அரசியல்வாதிகளால் நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பெரிதும்
பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நீதிமன்றங்களின்
துணிச்சலான மற்றும் நேர்மையான நடவடிக்கைகளின் காரணமாகவே
பல்வேறு ஊழல்கள்
அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன; ஏமாற்று அரசியல்வாதிகளின் தவறான நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.
சமீபத்தில் கூட குற்ற
வழக்குகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள்
தண்டனை விதிக்கப்பட்ட
அரசியல்வாதிகளின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவிகள் ( அப்பீலுக்காக
காத்திராமல் ) உடனடியாக பறிக்கப்பட வேண்டும் என்றும்
சிறையிலிருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட
தடை விதித்தும்
உச்ச நீதிமன்றம்
புரட்சிகரமான 2 தீர்ப்புகளை வழங்கியது.
நீதிமன்றங்களின் இத்தகைய நடவடிக்கைகளின்
காரணமாகவே மக்கள்
பாராளுமன்ற ஆட்சி முறையில் கொஞ்சமாவது நம்பிக்கை
கொண்டிருக்கிற சூழ்நிலையில் அதே நீதிமன்றங்கள் நீதி
வழங்க எடுத்துக்
கொள்கிற நீண்ட
கால தாமதம்
கவலைக்குரிய விஷயமாக இருந்து கொண்டிருக்கிறது. சமூகத்திலும் அரசியலிலும் நிலவுகிற பல்வேறு
குற்றங்களுக்கும் முறைகேடுகளுக்கும் இந்த காலதாமதமே பிரதான
காரணமாயிருக்கின்றது என்பது மறுக்க
முடியாதது.
எனவே நீதி மன்றங்கள்
முதலில் இதில்
கவனம் செலுத்த
வேண்டும்.நீதி
வழங்கப்பட்டால் மட்டும் போதாது;தகுந்த காலத்திலும்
வழங்கப்பட வேண்டும்.