Sunday 19 April 2015

காரணமில்லாமல் காரியமில்லை

1)அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டும்; அவர் விலைபோய்விட்டார்.
2)கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை ஒடிஸாவுக்கு மாற்றியது தவறு; இது மத்திய அரசு ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செய்கிற சதிவேலை.
3)உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது தவறு.
4) பவானிசிங்கை மாற்றக் கோரி கருணாநிதி ( அன்பழகன் )தொடுத்திருக்கும் வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உடனடியாக அமைத்தது தவறு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து ஜெயலலிதாவிற்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்.
5) ஜெயலலிதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்தது தவறு
 தவறு..தவறு.. தவறு.. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் கருணாதிக்கு இப்படி எல்லாமே தவறாகப்படுகிறது.
 நீதிமன்றம் இப்படிச் செய்யலாமே..
ஸ்டாலின் சொல்பவரை அரசு வழக்கறிஞராக நியமித்து விடலாம்;
கனிமொழி சொல்பவரை வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக நியமித்து விடலாம்;
கருணாநிதி சொல்பவரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துவிடலாம்.
ஜெயலலிதாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து விடலாம்;தனிமை சிறையில் அடைத்துவிடலாம்;
அவரது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிடலாம்.

இப்படியெல்லாம் நிகழ்ந்தால் கருணாநிதிக்கு சந்தோஷமாயிருக்கும்; 'நீதி வென்றது' என்று மகிழ்ச்சியோடு அறிக்கை விடுவார்.
ஆனால், கருணாநிதியின் ஆசைப்படியே எல்லாம் நடக்காதே.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ( கீழ்கோர்ட்டில் )சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்தபோது,வழக்கை விரைந்து முடிக்க விடாமல் ஜெயலலிதா வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருப்பதாக கருணாநிதி குற்றம்சாட்டினார்.
ஆனால், இப்போது மேல்முறையீட்டு விசாரணையில் ( APPEAL ) வழக்கை விரைந்து முடிக்க அரசு வழக்கறிஞரிலிருந்து உச்சநீதிமன்றம் மத்திய அரசு அனைத்தும் இணைந்து சதி செய்வதாகப் பதறுகிறார்; குற்றம்சாட்டுகிறார். வழக்கை தாமதப்படுத்த என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் பிறரைத் தூண்டிவிட்டு பின்னணியிலிருந்து செய்து கொண்டுவருகிறார்
கீழ்கோர்ட் விசாரணையின்போது  தி.மு.. கூட்டணி .மு.கூ.அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது. அந்த அரசின் மூலம் ஜெயலலிதா இனி அரசியலிலே இருக்க முடியாத அளவிற்கு ஒரு தீர்ப்பைப் பெற கருணாநிதி தனது செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கக் கூடும்;அதனால் வழக்கு விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இப்போதிருக்கும் மத்திய அரசு நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடுகள் செய்வதில்லை. எனவே, நேர்மையான முறையில் விசாரணை நடந்தால் ஜெயலலிதா விடுதலையாகிவிடுவார் என்று கருணாநிதி அஞ்சுகிறார். அதனால்தான், 3 மாதங்களில் மேல் முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எப்படி உத்தரவிடலாம் என்று கோபப்படுகிறார்.  
2016 சட்டமன்றத் தேர்தல் முடியும்வரை வழக்கு முடிந்துவிடக் கூடாது; ஜெயலலிதா குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையாகிவிடக் கூடாது என்று கருதுகிறார். தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுவிட்டால், தேர்தலில் தி.மு.. மிக மோசமான படுதோல்வியைச் சந்திக்கும். ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புடைய 2ஜி ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய கருணாநிதியின் குடும்பத்தினர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்தி.மு.. தனது இறுதி நிலையை எட்டிவிடும் அதனால்  எப்படியாவது வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்அதனால், நீதிமன்றத்தை அவமதிக்கிறார்; அரசு வழக்கறிஞரிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், ஜனாதிபதி என அனைவர் மேலும் சேற்றை வாரி இறைக்கிறார்.

ஆனால் மனிதன் ஆசைப்படுவது எல்லாம் நிறைவேறுவதில்லை

Monday 13 April 2015

பயங்கரவாதிகளை அழித்தொழியுங்கள்

             166 பேர் கொல்லப்பட்ட  மும்பை பயங்கரவாத தாக்குதலின் ( 26 நவம்பர் 2008 )முக்கிய காரணகர்த்தாவான பாகிஸ்தானைச் சார்ந்த லக்வி என்ற பயங்கரவாதி, பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறான். பாகிஸ்தான் அரசு போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி நீதிமன்றம் இவனை விடுவித்திருக்கிறது. பாகிஸ்தானின் இச்செயலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.


      இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் என்றுமே ஒரு பாதுகாப்பான புகலிடமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. எனவே பாகிஸ்தானின் இச்செயலில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏற்கனவே 1993 மார்ச்சில் மும்பையில் நிகழ்ந்த தொடர் கொண்டுவெடிப்பின் காரணகர்த்தாவான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் பாதுகாப்பாக இருந்து கொண்டிருக்கிறான்.
இவர்களுக்கெதிராக இந்தியா எத்தனை ஆதாரங்களை கொடுத்தாலும் பாகிஸ்தான் இவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது. இவர்கள் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப் போரின் கருவிகள்.

இவர்களை ஒடுக்க பாகிஸ்தானின் உதவியைக் கேட்பதால் ஒரு பயனும் விளையப்போவதில்லை.இவர்களை ஒழிக்க இந்தியாவே மறைமுக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். தாவூத் இப்ராஹிம், நக்வி மற்றும் மௌலானா மசூத் அஷார் போன்ற கொடிய பயங்கரவாதிகளை ரகசிய நடவடிக்கைகளின் மூலம் இந்தியா தீர்த்துக்கட்ட வேண்டும்.





 இந்தியாவிற்கெதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள், இந்தியர்களைக் கொன்றவர்கள் உலகின் எந்த மூலையிலும் பத்திரமாக இருக்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

Saturday 4 April 2015

குடத்துப் பாலில் துளி விஷம்

            ஏப்ரல் 14 அன்று தாலி அறுக்கும் நிகழ்ச்சி ஒன்றை .வெ.ரா. திடலில் நடத்தவிருப்பதாக தி.. அறிவித்திருக்கிறது. திருமணம் என்பது இரு உள்ளங்களை இணைக்கும் புனிதமான சடங்கு; அந்த இணைப்பு நிரந்தரமாக இருக்கும் என்பதன் அடையாளமாக ஆண் பெண்ணுக்கு தாலி அணிவிக்கிறான். திருமண உறவை புனிதமாகக் கருதும் பெண்களும் கணவன் அணிவித்த தாலியை தங்கள் உயிராகவே கருதிப் போற்றுகின்றனர். தனக்கு தாலி அணிவித்தவன் மரணமடைந்த பிறகே அந்த தாலி அவளது கழுத்திலிருந்து அகற்றப்படுகிறது
           தாலி பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்ற ஒரு கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது.அது முற்றிலும் தவறானது. தாலி பெண்களை புனிதப்படுத்துகிறது; பெருமைப்படுத்துகிறது; பாதுகாப்பும் அளிக்கிறது.தாலி கட்டிக் கொள்வதால் பெண் தனக்கிருக்கும் எந்த உரிமையையும் இழந்து விடுவதில்லை; தாலி கட்டாமலிருப்பதால் கூடுதலாக எந்த உரிமையும் பெண்ணுக்கு கிடைத்துவிடுவதுமில்லை
           விருப்பட்ட எந்த ஆணுடனும் கூடும் உரிமைதான் பெண்ணுரிமையின் இலக்கணம் என்ற கருத்துடையவர்க ள் வேண்டுமானால் தாலியை அடிமைச் சின்னமாக கருதலாம் மற்றபடி தாலி பெண்ணின் பெருமையைப் போற்றும் புனித அணிகலனே. தாலி அணிதல் என்னும் பழக்கம் பன்னெடுங்காலமாக நம் சமுதாயத்தில் நிலவி வருகிறது. அது மதச்சம்பிரதாயமா அல்லது தமிழ்ச் சமுதாயச் சம்பிரதாயமா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லாதது. என்னவாக இருந்தாலும் அது ஒரு புனிதமான பண்பாட்டின் வெளிப்பாடான சடங்கு. நமது பண்பாடும் கலாச்சாரமும் , நமக்கே என்றிருக்கின்ற சிறப்பான குடும்ப அமைப்பும் நிலை குலைந்தால் அவை வாழ்வின் பல துறைகளிலும் பெரும் சீரழிவை உண்டாக்கி மனித வாழ்வின் நிம்மதியையும் அமைதியையும் அழித்துவிடும்.
          இக்காலத்தில் பலர் தாலி அணிந்து திருமணம் செய்து கொள்கின்றனர்; மற்றும் சிலர் மாலை மாற்றிக் கொண்டும் மோதிரம் அணிந்தும் பதிவுத் திருமணமும் செய்து கொள்கின்றனர்.இதை யாரும் தடுப்பதில்லை. ஆனால், தாலி கட்டுவதை பெண்ணடிமைத்தனம் என்று பிரச்சாரம் செய்து தாலி அறுப்பதை ஒரு பொது நிகழ்ச்சியாக நடத்த முற்படுவது பெரும் சமூகக் கேட்டை உண்டாக்கும். இவர்கள் உண்மையிலேயே பெண் சுதந்திரத்திற்காகத்தான் இந்நிகழ்ச்சியை நடத்த விழைகிறார்கள் என்றால் இவர்கள் ஏன் பர்தா அணியும் பெண்களின் பர்தாக்களை அகற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை..? (இங்கு ஒரு சம்பவத்தை கூற வேண்டியிருக்கிறது.. .வெ.ரா. தனது 75 வயதில் தனது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக தான் மகள் போல் வளர்த்து வந்த 18 வயதுப் பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இது பெண்ணுரிமையைக் காக்கும் செயலின் வெளிப்பாடா..? )

          சிலர் சமுதாயத்தில் இருக்கும் தீய பழக்கவழக்கங்களை எதித்துப் போராடுவார்கள்; அவர்கள்  சீர்திருத்தவாதிகளாகப் போற்றப்படுகின்றனர். ஆனால், தி.. போன்ற அமைப்புகளின் வக்கிர புத்தி படைத்தவர்கள் சமுதாயத்தில் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களையெல்லாம் அழிக்க முற்படுகின்றனர். இவர்கள் மக்கள் சமுதாயத்தின் விரோதிகள் ஆவர். இவர்கள் குடம் பாலில் துளி விஷம் போன்றவர்கள். இவர்கள் களை எடுக்கப்பட வேண்டியவர்கள்.