166 பேர்
கொல்லப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலின்
( 26 நவம்பர்
2008 )முக்கிய
காரணகர்த்தாவான
பாகிஸ்தானைச்
சார்ந்த
லக்வி
என்ற
பயங்கரவாதி,
பாகிஸ்தான்
நீதிமன்றத்தால்
விடுதலை
செய்யப்பட்டிருக்கிறான்.
பாகிஸ்தான்
அரசு
போதுமான
ஆதாரங்களை
சமர்ப்பிக்கவில்லை
என்ற
காரணத்தைக்
கூறி
நீதிமன்றம்
இவனை
விடுவித்திருக்கிறது.
பாகிஸ்தானின்
இச்செயலுக்கு
இந்திய
அரசு
கடும்
கண்டனம்
தெரிவித்திருக்கிறது.
இந்தியாவிற்கு எதிரான
பயங்கரவாதிகளுக்கு
பாகிஸ்தான்
என்றுமே
ஒரு
பாதுகாப்பான
புகலிடமாக
விளங்கிக்
கொண்டிருக்கிறது.
எனவே
பாகிஸ்தானின்
இச்செயலில்
ஆச்சரியப்பட
ஏதுமில்லை.
ஏற்கனவே
1993 மார்ச்சில்
மும்பையில்
நிகழ்ந்த
தொடர்
கொண்டுவெடிப்பின்
காரணகர்த்தாவான
தாவூத்
இப்ராஹிம்
பாகிஸ்தானில்தான்
பாதுகாப்பாக
இருந்து
கொண்டிருக்கிறான்.
இவர்களுக்கெதிராக இந்தியா
எத்தனை
ஆதாரங்களை
கொடுத்தாலும்
பாகிஸ்தான்
இவர்களுக்கெதிராக
எந்த
நடவடிக்கையும்
எடுக்காது.
இவர்கள்
இந்தியாவிற்கு
எதிராக
பாகிஸ்தான்
நடத்தும்
மறைமுகப்
போரின்
கருவிகள்.
இந்தியாவிற்கெதிரான பயங்கரவாதச்
செயல்களில்
ஈடுபட்டவர்கள்,
இந்தியர்களைக்
கொன்றவர்கள்
உலகின்
எந்த
மூலையிலும்
பத்திரமாக
இருக்க
முடியாது
என்ற
நிலை
உருவாக்கப்பட
வேண்டும்.
No comments:
Post a Comment