Thursday 15 September 2011

இது பெருமைக்குரிய விஷயம்.


அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக் குழு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பெரும் பாராட்டு தெரிவித்திருக்கிறது. அவரது சீரிய ஆற்றல் மிக்க செயல்பாடுகளால் குஜராத் மாநிலம் இந்தியாவின் சிறந்த முன்னுதாரணமான மாநிலமாக விள்ங்குகிறது; ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு நிர்வாகத்தில் தாமதத்தை ஒழிப்பதிலும் மோடி வெற்றி பெற்றிருக்கிறார். குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி 11% ஆக உள்ளது. இது இந்தியாவின் சராசரி வளர்ச்சியை விட அதிகம். நாட்டின் மக்கள் தொகையில் 5% பங்கு வகிக்கும் குஜராத் நாட்டின் ஏற்றுமதியில் 20% பங்கு வகிக்கிறது. இவ்வாறு பலவாறாக மோடிக்கும் அவரது நிர்வாகத் திறமைக்கும் அந்த அறிக்கை பாராட்டு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் மோடியை மலினப்படுத்த பல்வேறு சக்திகள் முயற்சித்துக் கொண்டிருக்கையில், எங்கோ இருக்கும் அமெரிக்கா அவரின் நிஜத்தைக் கண்டறிந்து அவரது செயல்பாடுகளை பாராட்டியிருக்கிறது. அவர் 2014ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதம வேட்பாளாராக இருப்பார் என்றும் அந்த அறிக்கை கணித்திருக்கிறது.
இது நாமெல்லாம் சந்தோஷப்பட வேண்டிய செய்தி; சமீப காலங்களாக போஃபர்ஸ், 2ஜி,காமன்வெல்த் போன்ற பல்வேறு ஊழல்களால் இந்தியாவின் பெயர் உலக நாடுகளில் சந்தி சிரித்துக் கொண்டிருந்தது; இந்நிலையில்ரேந்திர மோடியின் சாதனைகள் உலக அளவில் பாராட்டப்பட்டிருப்பது நாட்டுக்கு பெருமை சேர்ப்பது.
     நரேந்திர மோடி பாராட்டுக்குரியவர்; நாட்டின் பிற மாநில முதல்வர்களும் அவரைப் போல சாதனைகளைச் செய்வதின் மூலமும் ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பதின் மூலமும் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்

No comments:

Post a Comment