Thursday 8 September 2011

ஐ.மு.கூ. அரசுக்கு ஓய்வேது .. ?



          மீண்டும் நிகழ்ந்து விட்டது அந்த கொடூர சம்பவம்; இந்த முறை டில்லியில். டில்லியில் நீதிமன்றம் எதிரே நிகழ்ந்த பயங்கரவாத சம்பவத்தில் 11 பேர் மரணமடைந்திருக்கின்றனர். வழக்கம் போல பிரதமர் அளிக்கும் கண்டன அறிக்கை, மக்கள் அமைதி காக்க வேண்டும் என்ற் வேண்டுகோள், இற்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர்களுக்கான நிதியுதவி போன்ற அனைத்து சம்பிரதாய சடங்குகளும் நிகழ்ந்தேறி விட்டன.
           கடந்த முறை மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது, .மு.கூ. அரசின் நிஜ பிரதமர்களில் ஒருவரான ராகுல் காந்தி எல்லா குண்டு வெடிப்புகளையும் அரசால் தடுத்து நிறுத்த முடியாது என்று முழங்கினார்; ஆனால் உண்மை என்னவென்றால் எந்த பயங்கரவாதச் சம்பவங்களையுமே இந்த அரசு தடுக்க முயற்சிக்காது; பயங்கரவாதிகள் மீது நடவடிக்கையும் எடுக்காது.
          நாட்டின் பாராளுமன்றத்தை தாக்கிய பயங்கரவாத கும்பலைச் சார்ந்த அப்சல் குருவையே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் தூக்கிலிடாமல் அவனைப் போற்றிப் பாதுகாத்து வருகிறது .மு.கூ. அரசு. அப்படியிருக்க பயங்கரவாதத்தை ஒடுக்கவும் பயங்கரவாதிகளை களையெடுக்கவும் இந்த அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று யாராவது நம்ப முடியுமா .. ?அப்படி யாராவாது நம்பினால் அவர்கள் கேழ்வரகில் நெய் வடியும் என்று நம்புகிற வகையைச் சார்ந்தவர்கள்தான்.
          .மு.கூ. அரசு சாதாரண மக்கள் எத்தனை பேர் மாண்டாலும் சிறிது கூட கவலைப்படாது; ஆனால், பயங்கரவாதி இறக்காமல் பார்த்துக் கொள்ள எல்லா வேலைகளையும் செய்யும். ஏனெனில் இது மக்களுக்கான அரசு அல்ல; பயங்கரவாதிகளுக்கான அரசு. இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நாளும் நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிக் கொண்டுதானிருக்கும்; அப்பாவிகள் நூற்றுக்கணக்கில் குண்டு வெடிப்புகளில் பலியாகிக் கொண்டுதானிருப்பார்கள். இந்தியாவின் தேசியப் பறவை மயில், தேசிய விளையாட்டு ஹாக்கி, தேசிய மலர் தாமரை என்பது போல இந்தியாவின் தேசிய நிகழ்ச்சி குண்டு வெடிப்புக்கள் என்ற ஒரு நிலையை உருவாக்காமல் இந்த .மு.கூ. அரசு ஓயப்போவதில்லை.


No comments:

Post a Comment