Saturday 10 January 2015

வேஷம்.. இது ஏமாற்ற போடும் வேஷம்




பா... அரசு வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டு செயல்படவேண்டும்; மதச்சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமாக நடக்கக் கூடாது என்று தி.மு.. பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மதச்சார்பின்மை பற்றி யார் யார்தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

கருணாநிதி ரம்ஜானுக்கு நோன்பு திறப்பு நாளில் குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பார்;கிறித்துவர்களின் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்வார்; முஸ்லீம் கிறித்துவர்களின் பண்டிகை தினங்களில் அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவிப்பார்.    
ஆனால், ஹிந்து மத விழாக்களில் மட்டும் அவர் கலந்து கொள்வதில்லை;அதுமட்டுமல்ல ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு மக்களுக்கு வாழ்த்து கூட சொல்லமாட்டார்; இப்போது மட்டுமல்ல..அவர் முதலமைச்சராக இருந்த போதும் கூட ஹிந்து மதத்தின் மீது மட்டும் விஷத்தைக் கக்கும் ஒரு ஹிந்து விரோதியாகத்தான் அவர் விளங்கினார்.இப்படிப்பட்டவர் எல்லாம் மத்தசார்பின்மை பற்றி பேசுவதும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக நடந்து கொள்ள வே ண்டும் என்று பிரதமர் மோடிக்கு அறிவுரை கூற முற்படுவதும் வடிகட்டிய, கடைந்தெடுத்த ஏமாற்று வேலை; 

பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மதத்தினரிடமும் சமமான அணுகுமுறையை மேற்கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருவதோடு ஊழல் என்பதே இல்லாத சிறப்பான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கிவருகிறார். இத்தகைய நேர்மையான,மக்களுக்காக உழைக்கும்   மோடியை, ஊழல்,விஞ்ஞான முறையில் மக்கள் பணத்தை தன் குடும்பத்திற்கு மாற்றிக் கொள்ளுதல்,மற்றும்  குடும்பத்திற்காகவே அரசியல்,ஆட்சி என்ற கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுபவர்கள் எல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் விமர்சிக்க முற்படுவது அநாகரிகமானது; அருவறுப்பானது.

No comments:

Post a Comment