ஏற்காடு தொகுதியில் நடைபெறவிருக்கின்ற
சட்டமன்ற
இடைத்
தேர்தலில்
தி.மு.க. வேட்பாளரை
ஆதரிக்க
வேண்டி
கருணாநிதி,
பா.ஜ.க. உட்பட பல்வேறு கட்சிகளுக்கு
கடிதம்
எழுதியிருக்கிறார்.கடந்த
வாரம்தான்
அவரது
தனயன்
ஸ்டாலின்
பாராளுமன்றத்
தேர்தலில்
தி.மு.க. தனித்து
நின்றே
40 தொகுதிகளிலும்
வெற்றி
பெறும்
என்று
மார்
தட்டியிருந்தார்.
இப்போது
தந்தை
ஒரு
சட்டமன்றத்
தொகுதியில்
நிற்பதற்கே
20 க்கும்
மேற்பட்ட
கட்சிகளிடம்
ஆதரவு
கேட்கிறார்.
தமிழகத்தில்
தி.மு.க. நசித்துப்
போய்
விட்டது
என்பதற்கு
கருணாநிதியின்
இந்த
வேண்டுகோள்
கடிதமே
ஆதாரம்.
இதில் முக்கியமான விஷயம்
என்னவென்றால்
பா.ஜ.க.விடம்
ஆதரவு
கோரியிருப்பதுதான்.
1999-2004 ல் திரு. வாஜ்பாய் அவர்கள் பிரதமராயிருந்த போது,
அவரது
அமைச்சரவையில்
சுமார்
54 மாதங்கள்
தி.மு.க. அங்கம்
வகித்தது.
கருணாநிதியின்
மருமகன்
முரசொலி
மாறன்
கோமாவில்
இருந்த
போது
கூட
அவரது
அமைச்சர்
பதவியை
வேறு
ஒருவருக்கு
மாற்றித்
தராமல்
அவர்
அமைச்சராகவே
இயற்கை
எய்த
வழி
செய்து
கொடுத்தார்
வாஜ்பாய்.
ஆனால்
மாறனின்
மறைவிற்குப்
பின்
அந்த
இலாகாவை
தனது
கட்சியில்
இருக்கும்
திறமை
வாய்ந்த
தலைவர்
யாருக்காவது
கொடுக்காமல்
எம்.பி. ஆகக்
கூட
இல்லாத
மாறனின்
மகன்
தயாநிதிக்கு
கொடுக்க
வலியுறுத்தினார்
கருணாநிதி.
தகுதியின்
அடிப்படையில்
அக்கோரிக்கையை
வாஜ்பாய்
நிராகரிக்க உடனே கருணாநிதி பா.ஜ.க. கூட்டணியை விட்டு
வெளியேறி
சோனியாவோடு
போய்ச்
சேர்ந்து
கொண்டார்.அன்றிலிருந்து
தொடர்ந்து
பா.ஜ.க. வை மதவாதக்
கட்சி,
வகுப்புவாதக்
கட்சி
என்றெல்லாம்
வசைபாடிக்
கொண்டிருந்த
கருணாநிதி
இன்று
அதே
பா.ஜ.க. விடம்
ஆதரவு
கேட்டு
கடிதம்
கொடுத்திருக்கிறார். ஏன்
..?
சில மாதங்களுக்கு முன்பு
சில்லறை
வர்த்தகத்தில்
அன்னிய
முதலீட்டிற்கு
வகை
செய்யும்
மசோதாவை
ஐ.மு.கூ. அரசு
கொண்டுவந்த
போது,வாயளவில்
தான்
அதை
தான்
எதிர்ப்பதாகக்
கூறிக்
கொண்டே
செயலளவில்
பாராளுமன்றத்தில்
தனது
கட்சி
எம்.பி. க்களை
மசோதாவிற்கு
ஆதரவாக
வாக்களிக்க
வைத்தார்
கருணாநிதி.அது பற்றிக்
கேட்டபோது
, மசோதா
தோற்கடிக்கப்பட்டால்,
ஐ.மு.கூ. அரசு
கவிழ்ந்து
விடும்; மதவாத பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று
கூறினார்
கருணாநிதி.
தனது
இரட்டை
வேட
அரசியலுக்குக்
கூட
பா.ஜ.க. மீது
பழியைப்
போட்டு
எக்காரணம்
கொண்டும்
பா.ஜ.க. ஆட்சிக்கு
வந்து
விடக்கூடாது
என்று
கவலைப்பட்ட
கருணாநிதி
இன்று
அதே
பா.ஜ.க. விடம்
தனது
கட்சி
வெற்றி
பெற
ஆதரவு
கோருகிறார்.
ஏன்..?
சேது சமுத்திரத் திட்டத்தை
கை
விட்டால்
நாங்கள்
காங்கிரசை
கை
விட்டு
விடுவோம்
என்று
சில
வாரங்களுக்கு
முன்
காங்கிரசை
எச்சரித்த
கருணாநிதி,
இன்று
இராமர்
பாலத்தை
இடிக்க
அனுமதிக்க
மாட்டோம்
என்று
உறுதியாக
அறிவித்திருக்கிற
பா.ஜ.க.வின்
கரங்களைப்
பற்றிக்
கொள்ளத்
துடிக்கிறார்.
ஏன்
..?
பொதுவாக ஜனாதிபதி, ஆளுநர்கள்,
பிரதமர்,
மாநில
முதலமைச்சர்கள்,கட்சித்
தலைவர்கள்
போன்றோர்
அனைத்து
மதத்தினர்களின்
சிறப்பு
நாட்கள்
மற்றும்
பண்டிகைகளின்
போது
மக்களுக்கு
வாழ்த்துச்
சொல்வது
வழக்கம்.
ஆனால்
கருணாநிதி
கிறித்துவ
முஸ்லீம்
பண்டிகைகளுக்கு
மட்டும்
வாழ்த்துச்
சொல்வார்.
ஹிந்துக்களின்
பண்டிகைகளின்
போது
வாழ்த்துச்
சொல்லமாட்டார்; மாறாக ஹிந்துக்களின்
மத
நம்பிக்கைகளை
கேலியும்
கிண்டலும்
செய்வார். அதோடு 2ஜி
ஊழல்
பணத்தில்
துவக்கப்பட்ட
அவரது
குடும்பத்
தொலைக்காட்சியான
கலைஞர்
டி.வி.யில்
ரம்ஜானை
முன்னிட்டு
கிறிஸ்துமஸை
முன்னிட்டு
என்று
சிறப்பு
நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பாகும்;
ஆனால்,
ஹிந்து
பண்டிகைகளின்
போது
மட்டும்
விடுமுறை
தின
சிறப்பு
நிகழ்ச்சி
என்ற
பெயரில்
நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பாகும்.
ஏனெனில்
ஹிந்து
பண்டிகைகளுக்கு
வாழ்த்துச்
சொல்லி
விட்டாலோ
தொலைக்காட்சிகளில்
சிறப்பு
நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பி
விட்டாலோ
கருணாநிதியின்
மதச்சார்பின்மைக்
கொள்கைக்கு
பங்கம்
வந்து
விடும்.
அந்த
அளவிற்கு
கருணாநிதி ஒரு தீவிர
மதச்சார்பின்மை
வியாதி.
ஹிந்து
மதத்தை
மட்டும்
வெறுப்பதில்
அந்த
அளவிற்கு ஒரு தீவிர
பகுத்தறிவு
வியாதி.
அப்படிப்பட்டவர்
ஒரு
சட்டமன்றத்
தொகுதியில்
தனது
கட்சி
நிற்பதற்கே
பா.ஜ.க்.வின்
உதவியைக்
கேட்கிறார்
. ஏன்
..?
விஷயம் ஏற்காடு தொகுதி பற்றியது மட்டுமல்ல;
நாடு
முழுக்க
சுழன்றடிக்கும்
மோடி
சூறாவளியைப்
பார்த்து
அடுத்த
தேர்தலில்
மோடியே
பிரதமராவார்
என்று
பெரும்பாலோர்
உறுதியாய்
நம்புகின்றனர்.
இந்நிலையில்
எப்படியாவது
மீண்டும்
பா.ஜ.க.வோடு
கூட்டணியில்
இணைந்து
கொண்டு
மத்தியில்
தனது
மகளையும்
மகனையும்
பேரனையும்
பணம்
சம்பாதிக்க
வசதியான
வளம்
கொழிக்கும்
இலாக்காக்களில்
அமைச்சர்களாக
நியமித்து
விடவேண்டும்
என்று
கருணாநிதி
ஆசைப்படுகிறார்.
அதற்காகத்தான்
ஏற்காட்டில்
தூண்டில்
போட்டிருக்கிறார்.
சோழியன் குடுமி என்றுமே சும்மா ஆடுவதில்லை.
இது ஒரு கேவலமில்லையா.. விவஸ்தையற்ற
தன்மையில்லையா
என்று
பலர்
நினைக்கலாம்.
ஆனால்,
தன்
குடும்ப
நலனிற்கு
முன்
இதெல்லாம்
ஒரு
பெரிய
விஷயமல்ல
என்று
கருணாநிதி
நினைக்கிறாரோ
என்னவோ.
No comments:
Post a Comment