Thursday 16 June 2011

.. நான் உங்களோடு



நான் உங்களோடு
சேர்ந்து போராடுகிறேன்;
பாதிக்கப்பட்டவர்களுக்கு
துணையாக்..
வாய் பேச குடியாதவர்களுக்கு
வாதாட.
நான் தொடர்ந்து போராடுவேன்..
என் போராட்டங்கள்
ஓயப் போவதில்லை.
என் தாய்நாடு ஊழல்வாதிகளால்
கொள்ளையடிக்கப்படுகிறது;
என் நாட்டின் மக்கள்  
சுயநலவாதிகளால்
சுரண்டப்படுகிறார்கள்.
அநீதிக்கும் தீமைக்கும் எதிரான
சகிப்புத்தன்மை என்பது
பேடித்தனத்தின் வெளிப்பாடு.
என் போராட்டங்கள்
பல வழிகளில்
தொடர்ந்து கொண்டிருக்கும்.
தனிமைப்படுத்தப்பட்டாலும்
தவறாய் சித்தரிக்கப்பட்டாலும்
நாட்டுக்காக,
என் மக்களுக்காக
என் மூச்சின்
கடைசி நிமிடம் வரை
போராட்டம் தொடரும்
உங்களில் ஒருவனாக
உங்களோடு கைகோர்த்து,
என்றென்றும் உங்களுக்காக
போராட்டங்கள்
தொடர்ந்து கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment