இலங்கையில் நிகழ்ந்த
முள்ளிவாய்க்கால்
படுகொலைகள்
நினைவு
தினத்தை
ஒட்டி
கடலூரில்
சீமான்
நடத்திய
கூட்டத்தில்
காஷ்மீரில்
செயல்படும்
பயங்கரவாதக்
குழுக்களில்
ஒன்றைச்
சார்ந்த
யாசின்
மாலிக்
கலந்து
கொண்டிருக்கிறான்.
இது
கடுமையான
கன்டனத்திற்குரியது.தமிழினப்
படுகொலைகள்
கன்டனக்
கூட்டத்திற்கு
ப.நெடுமாறன்,
வை.கோ. போன்றவர்களை
அழைக்காமல்
ஒரு
பயங்கரவாதக்
குழுவின்
தலைவனை
அழைக்க
வேண்டிய
அவசியம்
என்ன..?
அக்கூட்டத்தில் பேசிய
யாசின்
மாலிக்,இலங்கைத்
தமிழர்
பிரச்னையையும்
காஷ்மீர்ப்
பிரச்னையையும்
ஒன்று
போல
சித்தரித்துப்
பேசியிருக்கிறான்.
மாலிக்கின்
இப்பேச்சிற்கு
கூட்டத்தில்
எவ்வித
மறுப்பும்
தெரிவிக்கவில்லை
சீமான்.மேடை
நாகரீகம்
கருதி
அவர்
அவ்வாறு
இருந்திருப்பாரேயாயின்
இனியாவது
சீமான்
மாலிக்கின்
கருத்திற்கு
உடனடியாக
மறுப்பு
தெரிவிக்க
வேண்டும்.
ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு
இந்தியாவின்
பிற
மாநில
மக்களைப்
போல
அனைத்து
உரிமைகளும்
அதிகாரங்களும்
உண்டு;
இன்னும்
சொல்லப்போனால்
அரசியல்
சட்ட
370வது
பிரிவின்படி
பிற
மாநில
மக்களை
விட
காஷ்மீர்
மக்களுக்கு
கூடுதல்
அதிகாரங்கள்
உண்டு.
ஜம்மு-காஷ்மீரில் ஜம்மு,லடாக்
மற்றும்
காஷ்மீர்
என்ற
3 பிராந்தியங்கள் உண்டு. இதில் ஜம்முவில் ஹிந்துக்களும்
லடாக்கில்
பௌத்தர்களும்
காஷ்மீரில்
முஸ்லீம்களும்
அதிக
அளவில்
வாழ்கின்றனர்.
இதில் காஷ்மீர்
பகுதியில்
மட்டுமே
மத
அடிப்படைவாதப்
போராட்டங்களும்
வன்முறைக்
கலவரங்களும்
நடந்து
கொண்டிருக்கின்றன. ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் எவ்விதப் பிரச்னையுமில்லை. இங்கு நடந்து
கொண்டிருப்பது
முழுக்க
முழுக்க
மத
அடிப்படையிலான
பயங்கரவாதமே
தவிர
உரிமைகளுக்கான
போராட்டமல்ல.
ஜம்மு
பகுதியிலும்
லடாக்கிலும்
முஸ்லீம்கள்
எல்லா
அதிகாரங்களுடனும்
உரிமைகளுடனும்
வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்,
காஷ்மீர்
பகுதியில்
வாழ்ந்து
கொண்டிருந்த
இலட்சக்கணக்கான
ஹிந்துக்கள்
அங்கிருந்து
மத
அடிப்படைவாதிகளால்
விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால், இலங்கையில் தமிழர்களுக்கு
சிங்களர்களுக்கு
இணையான
அதிகாரங்களோ
உரிமைகளோ
கிடையாது.எனவேதான்
முதலில்
அமைதி
வழிப்
போராட்டங்கள்
நடந்து
இறுதியில்
பிரபாகரனின்
தலைமையிலான
பெரும்
ஆயுதப்
போராட்டம்
நடந்தது.
சுருங்கச்
சொன்னால்,
இலங்கையில்
நிகழ்வது
தமிழர்களுக்கான
உரிமைப்
போராட்டம்;
காஷ்மீரில்
நடப்பது
மத
அடிப்படைவாத
குழுக்களின்
பயங்கரவாதம்.
எனவே
காஷ்மீர்ப்
பிரச்னையும்
இலங்கைப்
பிரச்னையும்
ஒன்றல்ல. இரண்டையும் ஒன்று என்று கூறுபவர்கள் இலங்கைத்
தமிழர்
போராட்டத்தை
கொச்சை
படுத்த
நினைக்கிறார்கள்
என்றே
பொருள்.
இலங்கைத் தமிழர்
போராட்டம்
நியாயமானது;
ஆதரிக்கப்பட
வேண்டியது;அவர்களுக்குரிய
உரிமைகளையும்
அதிகாரங்களையும்
பெற்றுத்
தர
வேண்டியது
இந்தியா
உட்பட்ட
உலக
நாடுகளின்
கடமை.
ஆனால்,
காஷ்மீரில்
நடக்கும்
பயங்கரவாதம்
அடக்கி
ஒடுக்கப்பட
வேண்டியவை.
எனவே முள்ளிவாக்கால் படுகொலைகள்
நினைவு
தினத்திற்கு
மாலிக்
அழைக்கப்பட்டது
மிகப்பெரும்
தவறு.
இப்படிப்பட்ட
பயங்கரவாதிகளை
எல்லாம்
அழைத்து
வந்து
இலங்கைத்
தமிழர்
போராட்டத்திற்கு
ஆதரவு
திரட்ட
நினைப்பது
கொள்ளிக்கட்டையால்
தலையை
சொறிந்து
கொள்வதற்கு
சமமாக
மாறிவிடும்.
இப்படிப்பட்ட சம்பவங்கள்
ராஜபக்க்ஷேவிற்குத்
தான்
நற்பெயரைத்
தேடித்தரும்
No comments:
Post a Comment